சென்னையில் வீடு வாங்க ஆசைப்பட்டவரிடம் ஒரே பொய்யில் 36 லட்சம் சம்பாதித்த தம்பதி.. இறுதியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடுக்குமாடி வீடு வாங்குவதோ, வீடு கட்ட இடம் வாங்குவதோ ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் எட்டாத கனவாக இருக்கிறது. கோடிகளில் பணம் உள்ளவர்களே அடுக்குமாடி வீடும், இடமும் வாங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் புறநகரிலேயே 50 லட்சத்தை கொட்டினால் தான் வீடு கட்ட முடியும் என்கிற நிலை உள்ளது. இதனால் தமிழ்நாடு நகர்புற வாழ்விடத்தில் (குடிசை மாற்று வாரிய வீடுகள்) வீடுகளைவாங்க பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி ஆர்வம் காட்டியவரிடம் ஒரு தம்பதி 36 லட்சம் மோசடி செய்துள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

சென்னையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் கட்டி விற்கப்படுகின்றன. மிக குறைந்த விலையில் சென்னை நகருக்குள்ளேயே வசிக்க விரும்புவோருக்கு இந்த அடுக்குமாடி வீடுகள் வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அரசு குறைந்த முன்பணம் மற்றும் மிக குறைந்த வட்டியில் கடனுடன் வீடுகளை தருகிறது. இந்த வீடுகளை வாங்க மக்கள் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி ஒருவர் ஆர்வம் காட்டினார். ஆனால் அவர் 36 லட்சத்தை ஏமாந்துள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Couple makes 36 lakh through a single lie from someone wishing to buy a house in Chennai

சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த 38 வயதாகும் பேபி என்பவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறுகையில், "சென்னையைச் சேர்ந்த வினோத்பாபு என்பவர் தன்னை குடிசை மாற்று வாரிய ஊழியர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் என்னிடம், ரூ.3 லட்சம் கொடுத்தால் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி ரூ.3 லட்சம் கொடுத்தேன். அத்துடன் எனது தாயார் மற்றும் தெரிந்தவர்களையும் அறிமுகப்படுத்தினேன். இவ்வாறு 13 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.36 லட்சத்து 60 ஆயிரத்தை வினோத்பாபு பெற்றுக்கொண்டார்.

பின்னர் வினோத்பாபு எங்களுக்கு வழங்கிய குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை மற்றும் மின்சார அட்டை நகல்களை குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் சரிபார்த்தபோது, அவை போலியான ஆவணங்கள் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தோம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த வினோத்பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி உமா மகேஸ்வரி (30) ஆகியோரை எம்.கே.பி. நகரில் வைத்து கைது செய்தனர். விசாரணையில், வினோத்பாபு மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவு மற்றும் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையங்களில் மோசடி வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+