அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என எச்சரிக்க முதல்வர் தயாரா? - எடப்பாடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லையெனில், "தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்" என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் விஜய் தயாரா? என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணைகளில் நீர்மட்டம் குறைவாக உள்ளது. எனவே, தற்போது தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

Vijay

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி கர்நாடகா ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 32 டிஎம்சி தண்ணீரையும் திறக்க வேண்டும். எனினும், நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடக அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது பரந்து விரிந்த பாரதத்தில் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள் உள்ளனர்! அவர்களில் திமிர்த்தனமும் அதிகார மமதையும், சர்வாதிகார மனப்பான்மையும், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட ஒரே ஆட்சியாளர்களாகத் நிகழ்வது கர்நாடகத்தை நிர்வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்பது நம் நாட்டின் சாபக்கேடு!

தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் தங்களின் வேளாண் தொழிலுக்கு காவிரி நீரை நம்பித்தான் இருக்கிறார்கள். சுமார் 20-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள் குடிநீருக்கு காவிரி நீரை பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக நாம் அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்று கர்நாடக ஆட்சியாளர்கள் நினைக்கிறார்களே தவிர, காவிரியில் நமக்குள்ள உரிமையை உணர் மறுக்கிறார்கள்! காவிரி நதிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட (Cauvery Water Disputes Tribunal) காவிரி நதிநீர் தகராறு தீர்ப்பாயமும் உச்ச நீதிமன்றமும் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி பல தீர்ப்புகளை வழங்கிய பின்பும், அவைகளை உதாசீனப்படுத்துவதையே கர்நாடக ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் பெரும் வளர்ச்சிக்கு அங்கு வாழும் தமிழர்களின் உழைப்புதான் காரணம் என்பதை, தற்போது ஆட்சி செய்யும் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் அரசின் நீர்பாசனத் துறை அமைச்சர் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் தர உத்தரவிடவில்லை என்றும், தமிழகத்திடமிருந்து காவிரியில் உரிய பங்கு நீரை திறந்துவிட எந்தக் கோரிக்கையும் விடவில்லை என்றும் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற காவிரி ட்ரிபியூனல் தீர்ப்பையும் அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும். கர்நாடக அரசு முறையாக செயல்படுத்துகிறதா என்பதை கண்காணிப்பது தாள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் பணி. இதை மறைத்துவிட்டு மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை. தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக நிர்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி சொல்வது வடிகட்டிய பொய்.

தமிழக மக்களின் வாழ்வோடு எர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் விளையாடுவதை த.வெ.க அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது! கர்நாடக அரசு காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகம் தமிழகத்திற்கு நாவேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்கு தவெ.க. அரசின் முதலமைச்சர் கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கவில்லைபெளில், 'தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்" என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா?

"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"
ஆட்சிப் பொறுப்பில் இருந்து தவறி, மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அந்த அறநெறியே, எமனாக (கூற்றாக) மாறி தண்டிக்கும் என்று தமிழக, கர்நாடக இரு ஆட்சியாளர்களையும் எச்சரிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+