ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கும்.. அதி வேக நேர்காணல்.. புதிய சாதனை படைத்த திமுக!
சென்னை: திமுக வரலாற்றிலேய முதல் முறையாக ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தி அசத்தியுள்ளனர்.
இடைத் தேர்தலாகட்டும், பொதுத் தேர்தலாகட்டும் திமுகவில் நேர்காணல் நடத்தித்தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்கள். அதுதான் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை.
திமுகவின் நேர்காணல் நடைமுறையைத்தான் பின்னாளில் மற்ற கட்சிகளும் கடைப்பிடிக்க ஆரம்பித்தன. இன்று அதிமுக, தேமுதிக என எல்லோருமே இதைத்தான் பின்பற்றி வருகின்றனர்.
முந்திக்கொண்ட அதிமுக.. தவறவிட்ட திமுக.. 18 தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின் இதை செய்வாரா?
குறுகிய காலத்தில்
இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை ஒரே நாளில் நடத்தி முடித்துள்ளது திமுக. திமுக வரலாற்றில் இப்படி ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்பட்டதில்லை.
40 தொகுதிகளுக்கும் ஒரே நாளில்
முதலில் சட்டசபை இடைத் தேர்தலுக்கான நேர்காணலை திமுக நேற்று முன்தினம் நடத்தியது. நேற்று லோக்சபா வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடந்தது. அதில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுத்திருந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.
கனிமொழியும்
நேற்றைய நேர்காணலில் ஸ்டார் மனுதாரர் கனிமொழி ஆவார். தூத்துக்குடி தொகுதிக்கான நேர்காணலில் அவர் கலந்து கொண்டார். அவரிடம் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்பாலு ஆகியோர் கேள்விகள் கேட்டனர்.
11 மணி வரை
நேற்றைய நேர்காணல் இரவு 11 மணி வரை தொடர்ந்துள்ளது விண்ணப்பித்த ஒருவரையும் விடாமல் நேர்காணல் கண்டார் ஸ்டாலின். 20 தொகுதிகளில்தான் திமுக போட்டியிடுகிறது என்றாலும் கூட 40 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடத்தியுள்ளார் ஸ்டாலின்.