திமுக முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் காலமானார்..அரசியல் தலைவர்கள் இரங்கல்
சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக டாக்டர் மஸ்தான் 1995 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், 2001 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் அவருக்கு திமுகவில் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.

நேற்றைய தினம் திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதியை சந்தித்து வாழ்த்து கூறியதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் மஸ்தான்.
இந்தநிலையில் இன்று காலை காரில் ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது டாக்டர். மஸ்தானுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் எம்.பி. மஸ்தான் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையர் துணைத் தலைவராக இருந்தவர். அவரது மறைவு திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஸ்தான் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications