லோக்சபா தேர்தல்: ரெடியாகும் திமுக- சென்னையில் கூட்டணி தலைவர்கள் கூட்டம்- திருவாரூரில் நிதிஷ்குமார்!
சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை திமுக முடுக்கிவிட தொடங்கிவிட்டது. சென்னையில் இன்று நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தில் கருணாநிதி சிலைகள், கருணாநிதி படிப்பகங்கள், கூட்டணி தலைவர்கள் கூட்டம் என லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து வியூகம் வகுத்துள்ளது திமுக.
லோக்சபா தேர்தலுக்கு சரியாக ஓராண்டுதான் இருக்கிறது. லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடைபெறவும் கூடும் எனவும் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலை முன்வைத்து அரசியல் கட்சிகள் வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன.

பாஜக, காங்கிரஸ் கட்சிகளைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தலுக்கு முந்தைய சட்டசபை தேர்தல்களை மிக முக்கியமானதாகப் பார்க்கிறது. அதே நேரத்தில் மாநில கட்சிகளை காங்கிரஸ் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கும் அரசியல் நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்வில் திமுக உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதனை லோக்சபா தேர்தல் கூட்டணிக்கான ஒத்திகையாவும் பார்க்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனைத் தொடர்ந்து திமுகவும் இன்று சென்னையில் கூட்டிய உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலை இலக்கு வைத்தே பல்வேறு வியூகங்களுடன் தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் கருணாநிதி சிலைகள், படிப்பகங்கள், கிராமங்கள் தோறும் கொடிக் கம்பங்கள் அமைத்தல் என பரந்துபட்ட அளவில் திமுகவினரை களத்தில் இறக்கிவிட்டிருக்கிறது கட்சித் தலைமை. லோக்சபா தேர்தல் வரையிலும் திமுகவினர் ஓயாமல் கட்சிப் பணியாற்ற வேண்டிய அளவுக்கு கட்சித் தலைமை வியூகம் வகுத்துள்ளது. இத்தகைய வியூகமானது திமுக தொண்டர்களை, நிர்வாகிகளை எந்தவித சோர்வும் இல்லாமல் லோக்சபா தேர்தல் பணிக்கு கொண்டு செல்லக் கூடியதாகவும் இருக்கும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.
இன்னொரு பக்கம், ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் வடசென்னையில் நடத்தப்பட உள்ளது. திமுக கூட்டணியை பிளவுபடுத்த முடியும் என்கிற வகையில் பல்வேறு யூகங்கள் பரப்பிவிடப்படுகிற சூழலில் இந்த கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் முதன்மையானதாகவும் பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறக்கப்படுகிறது. திமுகவின் தேசிய அரசியல் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், திருவாரூர் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளார். கிளை கழகம் தொடங்கி தேசிய அரசியல் வரை பரந்துபட்ட அளவிலான திமுகவின் இந்த வியூகம் அக்கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்சக் கூடும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications