Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2,000 ரூபாய் 'மெகா' பிளான்.. தகரும் தடை? கோட்டையை நோக்கி திமுகவின் மகளிர் உரிமை தொகை அஸ்திரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ஏலேய்... இனிமே 1,000 இல்லையாம், 2,000-ஆமாம்!" - ரேஷன் கடை வரிசையிலிருந்து வாட்ஸ்அப் குரூப்கள் வரை இப்போது ஹாட் டாபிக் இதுதான்.

அடுத்த இன்னிங்ஸுக்கும் ரெடியாகிவிட்ட திமுக, தனது தேர்தல் துருப்புச் சீட்டாக 'மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000' என்கிற அறிவிப்பைத் தூக்கிப் பிடித்துள்ளது. ஆனால், இங்கே மேட்டர் பண உயர்வு மட்டுமல்ல; 'ரூல்ஸ்' என்னும் அந்தப் பெரும் சுவரை இடித்துத் தள்ளுவதுதான் தற்போதைய 'மாஸ்டர் பிளான்' என்கிறார்கள் அறிவாலயத்து உடன்பிறப்புகள்.

dmk election manifesto

எகிறும் எதிர்பார்ப்பு... ஏன் இந்த அதிரடி?

தற்போது வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய்க்குப் பின்னால் ஒரு பெரிய 'தகுதிப் பட்டியல்' (Eligibility Criteria) உண்டு. ஆண்டு வருமானம், மின்சாரப் பயன்பாடு, கார் வைத்திருப்பது, நில அளவு என ஏகப்பட்ட 'செக் போஸ்ட்கள்' இருந்தன. இதனால் பல லட்சம் பெண்களுக்கு இந்தத் தொகை எட்டாக் கனியாகவே இருந்தது. எதிர்க்கட்சிகளும் இதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, "எல்லாருக்கும் தருவோம்னு சொன்னாங்களே... எங்கே?" என்று குடைந்து கொண்டிருந்தன.

இதற்குச் செக் வைக்கத்தான், "அடுத்த முறை ஜெயித்ததும் ரூல்ஸை லூஸ் பண்ணுவோம்" என்கிற மூவ்-ஐ கையில் எடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

என்னென்ன விதிகள் நீக்கப்பட வாய்ப்பு?

அரசு வட்டாரங்களில் கசியும் தகவல்களின்படி, முக்கியமாக மூன்று 'வேலிகள்' அகற்றப்படலாம் எனத் தெரிகிறது:

மின்சாரப் பயன்பாடு (Electricity Consumption): தற்போது ஆண்டுக்கு 3,600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் உரிமைத் தொகை கிடையாது. "ஏங்க... நாலு பல்பு எரிஞ்சாலே இவ்வளவு வருதே" என்கிற புலம்பல்களைக் கேட்ட அரசு, இந்த விதியை முழுமையாக நீக்கவோ அல்லது எல்லையை வெகுவாக உயர்த்தவோ திட்டமிட்டுள்ளது.

நில அளவு (Land Criteria): 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். விவசாயக் குடும்பங்களில் இந்த விதி பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இனி நிலம் இருந்தாலும், அது குடும்பத்தலைவியின் பெயரில் இல்லையெனில் தாராளமாக விண்ணப்பிக்கலாம் என்கிற தளர்வு வரப்போகிறதாம்.

வருமான உச்சவரம்பு (Income Limit): ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் என்பதுதான் தற்போதைய கணக்கு. இதை 4 அல்லது 5 லட்சமாக உயர்த்துவதன் மூலம், நடுத்தர வர்க்கப் பெண்களையும் இந்தத் திட்டத்திற்குள் கொண்டு வர திமுக கணக்கு போடுகிறது.

'யார் அந்த ஒரு கோடி?'

தமிழகத்தில் சுமார் 2.2 கோடி ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. தற்போது 1.3 கோடி பெண்கள் பயன் பெறுகிறார்கள். இந்த விதிகள் தளர்த்தப்பட்டால், பயனாளிகளின் எண்ணிக்கை 1.8 கோடியைத் தாண்டும். "எல்லா அரிசி கார்டுதாரர்களுக்கும் ரூ.2,000" என்கிற பிம்பத்தை உருவாக்கி, பெண்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்வதுதான் 'திமுக மாடலின்' தற்போதைய வியூகம்.

"நாங்க சொன்னதைச் செய்வோம்... சொல்லாததையும் செய்வோம்" என மேடைக்கு மேடை முழங்கும் முதல்வர், இந்த ரூ.2,000 ப்ளஸ் ரூல்ஸ் தளர்வு மூலம் எதிர்க்கட்சிகளின் 'குல விளக்கு' உள்ளிட்ட வாக்குறுதிகளை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இருந்தாலும், "ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் கஜானா, இந்த மெகா சுமையை எப்படித் தாங்கும்?" என பொருளாதார நிபுணர்கள் கண்ணைக் கசக்குகிறார்கள். எது எப்படியோ, 'அக்கவுண்ட்ல பணம் ஏறுதா?' என்பதுதான் அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்பு. விதிகள் விலகுமா... விடை தெரிய இன்னும் சில மாதங்களே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+