நாளை பெரியார் பிறந்தநாள்! சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்போம்! திமுக தலைமைக்கழகம் அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரியார் பிறந்தநாளான நாளை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள வேண்டி வேலூருக்கு செல்வதால், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DMK headquarters has announced that Social Justice Day pledge taking event will be held at Anna arivalayam

இது குறித்து திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

"தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக" டபிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் கடை உறுதிமொழி ஏற்க வேண்டும்" என முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க;

தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2023 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும். இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+