அவதூறு பேச்சின் ஆதித்தாயே திமுக தான்.. எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றி என்னெல்லாம் பேசினீங்க.. சீறிய சீமான்
சென்னை: அவதூறு பேச்சின் ஆதித் தாயே திமுக தான். எம்ஜிஆர், ஜெயலலிதா, இந்திராகாந்தி பற்றி அவதூறாக பேசியதும் திமுக தான். நல்ல அரசியல் பற்றி பேசுவதற்கு, அடுத்தவங்களுக்கு சொல்லி கொடுப்பதில் திமுகவுக்கு ஒரு துளி கூட அருகதை கிடையாது என்று சீமான் கூறினார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சீமான் கூறியதாவது:- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக ஏன் விலகியது என்று தெரிந்திருக்கும். ஆனால் எங்களால் அப்படி விலக முடியாது. அவதூறாக பேசுவதில் திமுக தான் தாய். இந்திரா காந்தியை பேசியது, ஜெயலலிதாவை பேசியது, எம்ஜிஆரை பேசியது தான் திமுக. நல்ல அரசியல் பற்றி பேசுவதற்கு, அடுத்தவங்களுக்கு சொல்லி கொடுப்பதில் திமுகவுக்கு ஒரு துளி கூட அருகதை கிடையாது. சண்டாளன் என்ற வார்த்தை உண்மையிலேயே ஒரு சமூகத்தை குறிக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது.

அடி சண்டாளி என திரைப்பட பாடல் இருக்கிறது. அட சண்டாளா.. என பாஞ்சாலங்குறிச்சியில் வடிவேலு காமெடியில் ஒரு சீன் வந்திருக்கும். அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு தான் எனக்கு அந்த வார்த்தையில் ஒரு சமூக இருக்கிறது என்று தெரியும். ஒரு தாழ்த்தப்பட்டவர் நீதிபதியானது, அவர் தகுதியினால் வரவில்லை. இவங்க தான் அவரை நீதிபதியாக்கினார்கள் என்று ஆர் எஸ் பாரதி பேசினார். இது நாங்க போட்ட பிச்சை என்று பேசுகிறார்கள். உங்கள் ஆட்சி அதிகாரம் எல்லாம் நாங்க போட்ட பிச்சை என்று நாங்கள் யாரும் சொல்லவில்லையே.
சண்டாளன் என நாங்க எங்கே பாடுனோம். இருக்கிற பாட்டு. அதை எழுதி வெளியிட்டது அதிமுக. அதிமுக வெளியிடும் போது அப்போது எங்கே போய் இருந்தீங்க.. காதில் பஞ்சு வைத்து இருந்தீர்களா?.. கருணாநிதியே பேசியிருக்கிறார். பாசப்பறவை படத்தில் கூட அந்த நீதிமன்ற காட்சியில் சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார். இதேபோல் சேது சமுத்திர திட்டத்தை எந்த சண்டாளன் கெடுத்தான் என்றும் கருணாநிதி தான் அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.
சண்டாளன் என்ற வார்த்தையை நானும், சாட்டை துரைமுருகனும் கண்டுபிடித்தது மாதிரி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.. நாமக்கல் கவிஞர் பாடியிருக்கிறார். சங்க இலக்கியம் முழுவதிலும் சண்டாளன் என்ற வார்த்தை இருக்கிறது. கந்த சஷ்டி பாடலிலும் தான் சண்டாளன் என்ற வார்த்தை இருக்கிறது. கந்த சஷ்டி பாடல் எழுதியவர் மீதும் வழக்கு போடவேண்டும். கருணாநிதி மீது வழக்கு போட்டுவிட்டு எங்கள் மீது வழக்கு போடுங்கள்.
மதுரை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் கேரளாவில் மணல் அள்ளுவதற்கும், மலையின் கற்களை மண்ணாக்குவதற்கும் தடை இருப்பதால் தமிழ்நாட்டில் இருந்து மலையை கற்களாக்கி, மணலாக்கி அள்ளுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார்கள். இதற்கு தமிழ்நாடு அரசும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.
நீதிபதியும் ஒரு நாளைக்கு 700 லாரிகளில் எடுத்து செல்லலாம் என்று கூறியிருக்கிறார். அந்த நீதிபதி ஏன் அங்கு தடை விதித்து இருக்கிறீர்கள் என்று கேட்க வேண்டுமா இல்லையா?.. என் மலை எனக்கு.. என் மணல் எங்களுக்கு.. என் மண்ணின் வளத்தை பாதுகாக்கிறவர்கள் தானே எனக்கு தகப்பனாக இருக்க முடியும். மற்ற மாநிலங்களில் பெற்றவர்களே அப்பாவாக இருக்கிறாங்க.. இங்க மற்றவர்கள் அப்பனாக இருப்பதனால் தானே இப்படி சிக்கல். ஏன் இதை பற்றி கவலைப்படாம இருக்கிறாங்க.. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். இதனை கண்டித்து சீமான், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோர் பேசியிருந்தனர். இதனை தொடர்ந்து தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை காவலில் அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
-
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications