செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி!
சென்னை: சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதல் பெட்டிகளை இணைக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைத்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் 23 பெட்டிகளுடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 10 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி, மதுரை வழியாக இந்த ரயில்கள் செல்வதால் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். அதிலும் ஆன்மீக நகரங்களில் ஒன்றாக இருக்க கூடிய திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து ஒரே ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே நேரடியாக இயக்கப்படுகிறது.

செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்
இந்த ரயில், திருச்சி, மதுரை, நெல்லையை கவர் செய்து திருச்செந்தூர் செல்கிறது. இதனால் பயணிகள் கூட்டம் இதில் அலைமோதும். அதுபோக திருச்செந்தூர் திருத்தலத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர். இதனால் இந்த ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் திருச்செந்தூர் கோயில் பண்டிகை நேரங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும்.
கூடுதலாக 5 பெட்டிகள் சேர்ப்பு
தற்போது 18 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலில் பயணிகள் நெரிசல் அதிகமாக இருப்பதுடன், முன்பதிவு காத்திருப்போர் பட்டியலும் அதிகரித்து வருகிறது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என பயணிகள் தெற்கு ரயில்வேக்கு நீண்ட நாட்களாக கோரிக்க விடுத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் கூடுதலாக 5 ரயில் பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வரும் 15 ஆம் தேதி முதல்..
அதாவது 18 பெட்டிகளுடன் இயங்கி வந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இனி 23 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வரும் 15 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் (வண்டி எண் 20605)செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றும், மறுமார்க்கத்தில் அதாவது வரும் 16 ஆம் தேதி முதல் திருச்செந்தூர் - சென்னை எழும்பூருக்கு (வண்டி எண் 20606) செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 23 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஏசி பெட்டிகள் எத்தனை?
புதிதாக 2-வது வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டிகள் இரண்டு மற்றும் படுக்கை வசதி பெட்டிகள் இரண்டு என மொத்தம் 5 பெட்டிகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. இதன்மூலம் ரயிலின் மொத்த பெட்டிகளின் எண்ணிக்கை 18-ல் இருந்து 23 ஆக உயர்கிறது.
கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்ட பிறகு, முதல் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 2-வது வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 2, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டிகள் 3, படுக்கை வசதி பெட்டிகள் 11, முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 4 மற்றும் சரக்கு பெட்டிகள் 2 என மொத்தம் 23 பெட்டிகள் இடம்பெறும். இந்த மாற்றத்தால் சுமார் 350 பயணிகள் கூடுதலாக முன்பதிவு செய்து பயணிக்க முடியும். மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும் என ரயில்வே நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications