Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு மட்டும் டீச்சர்களே இல்லை! இதான் மும்மொழி கல்வி சதி- எழிலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்டிஐ மூலமாக தகவல் எடுக்கப்பட்டதில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது. மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியாகும். ஒன்றிய அரசு நடத்துகிற பள்ளிகளே அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று திமுக எம்எல்ஏ எழிலன் கூறியுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மும்மொழிக் கல்வி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆர்டிஐ மூலமாக தகவல் எடுக்கப்பட்டதில் தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது. ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சைனிக், கேவி பள்ளிகளில் 53 ஆசிரியர்கள், 100 இந்தி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், தமிழ் பேசும் ஆசிரியர்கள் பூஜ்ஜியம்.

Trilingual policy MLA Ezhilan

மும்மொழிக் கொள்கை என்பது மறைமுகமாக இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியாகும். ஒன்றிய அரசு நடத்துகிற பள்ளிகளே அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மும்மொழிக் கொள்கை என்றாலே இந்தி திணிக்கப்படாது என்பது அல்லது. மும்மொழி என்றாலே தமிழ், ஆங்கிலம், இந்தி தான். எந்த நிலையில் இது கட்டாயம் ஆக்கப்படும் என்றால், சிறு வயதில் இருந்தே ஒரு குழந்தை தனது பாடத்திட்டங்கள் மூலமாக இந்தியை படிக்கும் போது அதனை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

குழந்தைகள் மூன்றாம் வகுப்பிலேயே மொழிப் பாடங்களுக்கான திணிப்பு நடக்கக் கூடாது. ஆக்கப்பூர்வமான சூழலியல் இருந்த படிப்புகளைத் தான் குழந்தைகள் படிக்க வேண்டும். பாட நூல்களிலேயே அவர்களுடைய மொழியை திணித்து விடுவார்கள். அரசுப் பள்ளிகளில் முதல் தலைமுறையாக இருப்பார்கள். பட்டியலின மக்கள், பழக்குடி மக்கள், மலைவாழ் மக்கள் அரசுப் பள்ளிகளில் படிப்பார்கள். தாய்மொழிக் கல்வி, ஆங்கில மொழியும் கற்றதினால்தான் தற்போது சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

இருமொழிக் கொள்கை மூலமாகத்தான் சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்து மருத்துவர், வழக்கறிஞர், இன்ஜினியர் என மக்கள் நல்ல நிலைக்கு வந்துள்ளனர். மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கும் மாநிலங்களான பீகார், உத்தரப்பிரதேசம் சமூக பொருளாதார தளத்தில் உயர்ந்திருக்கிறார்களா. 2019 இல் தமிழகத்தில் 6 ஆம் வகுப்பில் 89 சதவீதமாக இருந்த எண்ணிக்கை 97 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதே இந்தி பேசும் மாநிலங்களில் 59 சதவீதத்தை தாண்டுவதில்லை. பள்ளிக்கு வரவைப்பதில் இருந்து ஒரு நல்ல சூழலை திராவிட மாடல் ஏற்படுத்தியுள்ளது.

காமராஜர் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். அதனை மத்திய அரசு கொண்டு வர 50 ஆண்டுகள் ஆனது. எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்கள், கலைஞர் முட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இப்போது பல பள்ளிகளில் நமது முதல்வர் 20 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். கற்றல் திறன், கணக்குத் திறன், ஊட்டச்சத்து போன்றவை குழந்தைகளுக்கு கிடைக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் இல்லத்தரசிகள் மாதம் 900 ரூபாய் அளவுக்கு சேமிக்கின்றனர். 22 ஆயிரம் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. அரசாங்கப் பள்ளி மாணவர்கள் கிட்டத்தட்ட ஆயிரத்து நூறு பேர் சென்டிரல் ஆஃப் எக்சலன்ஸில் சேர்ந்துள்ளனர். பல்வேறு ஒருங்கிணைந்த திட்டங்களை செயல்படுத்தி எந்த மாடல் வெற்றியடைந்த மாடலாக இருக்கிறது என்பதைப் பின்பற்றி அதனை மத்திய அரசு பின்பற்றாமல் மொழியை திணிப்பதுதான் அவர்களுடைய சித்தாந்தமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+