பாயும் வழக்குகள்.. திமுக மா.செக்கள், எம்.பி., எம்எல்ஏக்களுடன் நாளை ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் எனது தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது, மாவட்ட கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கூட்டத்தில், கழக நிர்வாகிகள் மீது, முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலில் பொய் வழக்குகள் புனைவது, சட்ட விரோத ஜனநாயக விரோத காவல்துறை கைது குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications