டிச.18இல் நடைபெறும் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் & மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
சென்னை: திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மாபெரும் வெற்றியைப் பெற்றன.
இந்தச் சூழலில் அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களை திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளைப் பெற்றுள்ளன.
நகர்ப்புற தேர்தல் குறித்து எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 18-12-2021 சனிக்கிழமை மாலை 5.30 மணி அளவில், சென்னை, "கலைஞர் அரங்கில்" நடைபெறும்.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications