டெல்லி போராட்டம்.. திருமாவை விடுங்க.. கனிமொழி ஏன் கலந்துக்கலை தெரியுமா?
மாமியார் காலமானதை அடுத்து கனிமொழி சோகத்தில் உள்ளார்
Recommended Video
சென்னை: டெல்லியில் நடைபெற்ற திமுக போராட்டத்தில் கனிமொழி கலந்து கொள்ளாதது பலவித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஆனால் அதில் ஒரு சோகப் பின்னணி உள்ளது.
மறைந்த கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி.. தந்தையின் மரணத்துக்கு பிறகு ஒரு இனம் புரியாத மவுனத்தில் உள்ளார்.
நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என்று அதிகமாக நம்பியவர் கனிமொழி. ஆனால் அது டிஆர் பாலுவுக்கு தரப்பட்டுவிட, துணை தலைவராக தேர்வானார் கனிமொழி. இதுபோன்ற நிறைய விஷயங்களில் கட்சியில் அவருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்ற தகவல்கள் அவ்வப்போது கசிந்து விட்டு போகும்.

மாமியார்
இந்நிலையில், இவரது மாமியார் கடந்த 19-ம் தேதி இறந்துவிட்டார். இவரது கணவர் அரவிந்தன் பிரபல தொழிலதிபர். பல்வேறு நாடுகளில் தொழில் தொடங்கி நடத்தி வருபவர். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் அரவிந்தனின் பெற்றோர் இருப்பதாக சொல்லப்படுகிறது. வயது முதிர்வு காரணமாக அரவிந்தனின் அம்மா, சுசிலா கோவிந்தசாமி மரணம் அடைந்துவிட்டார். அந்த சமயத்தில், கனிமொழி, தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். மாமியார் உடல் சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் தெரிந்ததுமே, கனிமொழி குடும்பத்துடன் விரைந்து சென்றார்.

கனிமொழி
அதனால்தான் டெல்லியில் திமுக நடத்திய போராட்டத்தில் கனிமொழியால் கலந்து கொள்ள இயலவில்லை. கனிமொழியின் மாமியார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் "திருமதி சுசிலா கோவிந்தசாமியை இழந்து வாடும் எனது சகோதரிக்கும், அவரது கணவர் அரவிந்தனுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருந்தார்.

அஞ்சலி
இது ஒரு பக்கம் இருந்தாலும், நேற்று திமுகவின் இளைஞர் அணி கூட்டத்திலும் கனிமொழியின் மாமியாருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக,கட்சி நிர்வாகிகள், மற்றும் நிர்வாகிகளின் ரத்த உறவுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தப்படும் என்பதுதான் திமுகவின் வரலாறு.

உதயநிதி
இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமே கனிமொழியின் மாமியாருக்கு இரங்கல் சொன்னதுதான். அது மட்டுமில்லை.. இளம் பெண்கள் பேரவை ஒன்று கனிமொழிக்காகவே தொடங்கப்படும் என்றும் சொல்கிறார்கள். இது ஒரு வகையில் கனிமொழியை சமாதானப்படுத்தும் ஒரு நடவடிக்கையாககூட பார்க்கப்படுகிறது. எப்படியோ, குடும்பத்தில் ஒற்றுமை தழைத்தால் சரி!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications