சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எதுக்கு மீன் குழம்பு பாத்திரத்தை கழுவணும்".. ரஜினியை பார்த்து பொளேரென கேட்ட ரவிக்குமார்!

ரஜினிகாந்த் பேச்சு குறித்து எம்பி ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "எதுக்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவ வேண்டும்? பேசாமல் அவர் ஒரு புது பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே.. போயஸ் கார்டனுக்கு எல்லாரும் போய், நீங்கள்தான் தமிழ்நாட்டையே காப்பாத்தணும்னு சொல்ல வேண்டும் என ரஜினி நினைக்கிறார்... இது சரி கிடையாது" என்று எம்பி ரவிக்குமார் ரஜினி பேச்சு குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    ரஜினியின் அரசியல் பேச்சு...ரசிகர்கள் குமுறல்

    ரஜினிகாந்த் இன்று காலை பேசும்போது, "முதலில் சிஸ்டத்தை சரி செய்யவேண்டும் என்று சொன்னேன். அரசியல் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும்... ஏன் அப்படி சொன்னேன் என்றால், மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்தால் நன்றாக இருக்குமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

    dmk mp ravikumar comments on rajinikanth speech

    ரஜினிகாந்த் இப்படி சொன்ன உதாரணம் பெரும் வைரலாகிவிட்டது.. பலரும் இதை பற்றி விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.. ரஜினியின் ரசிகர்கள் தரப்போ இதை பாராட்டி மகிழ்ந்து வருகிறது.
    இந்நிலையில், ரஜினியின் பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எம்பி ரவிக்குமார் தன் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது:

    "ரஜினியின் திட்டங்கள் அவர் தன் தொண்டர்கள் குறித்து என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள் என்கிறார்.. தொண்டர்கள்தான் ஊழலில் ஈடுபடுகின்றனர் என்றும் புதுசா ஒரு கருத்தை சொல்கிறார்... தங்கள் உயிரை கூட இழப்பதற்குத் தயாராக இருக்கும் தொண்டர்களை அவமானப்படுத்தும் கருத்தாக இது உள்ளது.

    முதல்வர் ரேஸில் இருந்து ஒதுங்கிய ரஜினி... ரூட் கிளியர் ஆனதால் உற்சாகத்தில் திமுகமுதல்வர் ரேஸில் இருந்து ஒதுங்கிய ரஜினி... ரூட் கிளியர் ஆனதால் உற்சாகத்தில் திமுக

    அவருடைய கருத்து அபத்தமானது.. ஆபத்தானது... மக்கள் குறித்து என்ன நினைக்கிறார் என்பதும் அவர் பேச்சில் தெரிகிறது... மக்களே நேரடியாக போயஸ் கார்டனுக்கு போய் நீங்கள்தான் தமிழ்நாட்டையே காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல வேண்டும் என ரஜினி நினைக்கிறார். இது சரி கிடையாது.

    மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைப்பதுபோல தமிழக அரசியல் இருப்பதாகக் சொல்கிறார்... எதற்கு மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவ வேண்டும்? அவர் ஒரு புதுப் பாத்திரத்தில் பொங்கல் வைக்கலாமே.. பாசிச மனநிலையில் ரஜினி பேசுகிறார்.. அடிப்படையில் அவர் நல்ல மனிதர்தான்.. ஆனால், அவருடைய கருத்துகள் ஆபத்தாக உள்ளது... மக்களுக்கு எதிரான கருத்துக்களாக உள்ளது... சுருக்கமாக அரசியல் கட்சி குறித்த புரிதல் அவருக்கு இல்லை" என்றார்.

    English summary
    dmk mp ravikumar comments on rajinikanth speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X