"ஒத்த ஓட்டு" சிங்கம்.. கர்நாடகாவில் 4 ஓட்டு! அண்ணாமலையின் முன்னேற்றம் -கலாய்த்த திமுக செந்தில்குமார்
சென்னை: அரவக்குறிச்சியில் வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே வென்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த தொகுதியில் 4 வாக்குகளை பெற்று இருப்பதாக திமுக எம்பி செந்தில்குமார் விமர்சித்து உள்ளார்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து இருக்கிறது. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றிபெற்று உள்ளது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளிலும், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சி ஒரு தொகுதியிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்து இருக்கும் சூழலில், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பலரும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரும் அண்ணாமலையை விமர்சித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவுக்காக அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் பாஜாவிற்கு வெறும் 10 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளதாக ஒரு செய்தியை பதிவிட்ட செந்தில் குமார், "இன்றைய பழமொழி: உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதை தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், "Correction:
ஒரு சிறு திருத்தம்: கர்நாடகாவில் நம்ம ஆளு பிரச்சாரம் செய்த தொகுதியில் 10 வாக்குகள் தான் விழுந்தன என்பது தவறு. 4 வாக்குகள் தான் விழுந்ததாம். So மீண்டும் இன்றைய பழமொழி: உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் (Pun unintended)" என்று மீண்டும் அதே பழமொழியை பதிவிட்டார்.

இந்த நிலையில் இன்று அவர் இது குறித்து வெளியிட்டு உள்ள பதிவில், "நான் பதிவிட்ட பழமொழியை screenshot போட்டு சிங்கத்தை மேலும் அவமான படுத்தும் டியர் வார் ரூம் கத்துகுட்டிகளா! நான் பாராட்டி தான் சொன்னேன். அரவக்குறிச்சியில் பூத் 214ல் பதிவான 927 வாக்குகளில் ஒத்த ஓட்டு வாங்குன சிங்கம், கர்நாடகாவில் ஒதுக்கப்பட்ட பூத்தில் 4 வாக்கு வாங்கியது முன்னேற்றமே." என்று பதிவிட்டு உள்ளார்.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்!












Click it and Unblock the Notifications