"ஒத்த ஓட்டு" சிங்கம்.. கர்நாடகாவில் 4 ஓட்டு! அண்ணாமலையின் முன்னேற்றம் -கலாய்த்த திமுக செந்தில்குமார்
சென்னை: அரவக்குறிச்சியில் வாக்குச்சாவடியில் ஒரு வாக்கு மட்டுமே வென்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த தொகுதியில் 4 வாக்குகளை பெற்று இருப்பதாக திமுக எம்பி செந்தில்குமார் விமர்சித்து உள்ளார்.
கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து இருக்கிறது. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றிபெற்று உள்ளது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி 65 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளிலும், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சி ஒரு தொகுதியிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்து இருக்கும் சூழலில், அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பலரும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரும் அண்ணாமலையை விமர்சித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவுக்காக அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்த உத்தரகன்னடா மாவட்டம் கிட்டூர் தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் பாஜாவிற்கு வெறும் 10 வாக்குகள் மட்டுமே விழுந்துள்ளதாக ஒரு செய்தியை பதிவிட்ட செந்தில் குமார், "இன்றைய பழமொழி: உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதை தொடர்ந்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், "Correction:
ஒரு சிறு திருத்தம்: கர்நாடகாவில் நம்ம ஆளு பிரச்சாரம் செய்த தொகுதியில் 10 வாக்குகள் தான் விழுந்தன என்பது தவறு. 4 வாக்குகள் தான் விழுந்ததாம். So மீண்டும் இன்றைய பழமொழி: உள்ளூரில் விலை போகாத மாடு, வெளியூரில் சலங்கை கட்டி ஆடுமாம் (Pun unintended)" என்று மீண்டும் அதே பழமொழியை பதிவிட்டார்.

இந்த நிலையில் இன்று அவர் இது குறித்து வெளியிட்டு உள்ள பதிவில், "நான் பதிவிட்ட பழமொழியை screenshot போட்டு சிங்கத்தை மேலும் அவமான படுத்தும் டியர் வார் ரூம் கத்துகுட்டிகளா! நான் பாராட்டி தான் சொன்னேன். அரவக்குறிச்சியில் பூத் 214ல் பதிவான 927 வாக்குகளில் ஒத்த ஓட்டு வாங்குன சிங்கம், கர்நாடகாவில் ஒதுக்கப்பட்ட பூத்தில் 4 வாக்கு வாங்கியது முன்னேற்றமே." என்று பதிவிட்டு உள்ளார்.
-
எனக்கு ஒன்னு.. என் மகனுக்கு ஒன்னு.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக அமைச்சர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
பெண்களிடம் தவறாக பேசினேனா? வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட் தொடர்பாக ராஜீவ் காந்தி விளக்கம்! -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
வடிவேலு பேச பேச திமுக அழிந்து போகும்.. வாய் ராசி அப்படித்தான் இருக்கு! அடித்துப் பேசிய செல்லூர் ராஜூ -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல்












Click it and Unblock the Notifications