"ஸ்வைப் 50".. எகிறும் எதிர்பார்ப்பில் ஸ்டாலின்.. கம்மென்று இருக்கும் எடப்பாடியார்.. தடதட யூகங்கள்
திமுக அல்லது அதிமுக மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது
சென்னை: திமுகதான் வெற்றி பெறும் என்ற கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், குறிப்பிட்ட 50 தொகுதிகள் பற்றின பேச்சு பலமாக எழுந்து வருகிறது.. அதென்ன 50 தொகுதிகள்?
நடந்து முடிந்த தேர்தலில் திமுகவுக்கு சாதகமான சூழலே ஏற்பட்டு வருகிறது.. எனினும் இந்த முறை பதிவான வாக்குகள் யாருக்கு சாதகமாக டிரான்ஸ்பர் ஆகி உள்ளன என்பது குறித்த சலசலப்புகளும் நடந்து வருகிறது.
இதில் திமுக தரப்பை பொறுத்தவரை, சில தகவல்கள் ஏற்கனவே வெளிவந்தவைதான்.. ஐபேக் டீம் 3 வித ரிப்போர்ட்களை எடுத்ததாக சொல்லப்ப்பட்டது.

3 ரிப்போர்ட்
ஒன்று, தேர்தலுக்கு முன்பு, மற்றொன்று தேர்தல் தினத்தன்று, இன்னொன்று தேர்தலுக்கு பிந்தைய வாக்குப்பதிவு சதவீத கணிப்புகள்.. இவைகளை வைத்து, எடுக்கப்பட்ட 3 ரிப்போர்ட்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சர்வேயை எடுத்து தந்துள்ளது.. அவைகளில் 180+ திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஐபேக் தவிர, பிற நிறுவனங்கள் எடுத்த சர்வேயிலும் கிட்டத்தட்ட இதே மாதிரியான எண்ணிக்கைதான் தரப்பட்டுள்ளது.

திமுக
அந்த வகையில்தான் திமுகதான் வெற்றி பெறும் என்ற யூகமும் பலமாக எழுந்து வருகிறது.. 180 என்பது உறுதியாகிவிட்டதால், மிச்சமுள்ள 50 தொகுதிகள் பற்றின ஆர்வத்தில்தான் திமுக உள்ளதாக தெரிகிறது.. அந்த 50 தொகுதிகளின் வாக்குகள் யாருக்கு சாதகமாகி உள்ளது? யாருக்கு டிரான்ஸ்பர் ஆகி உள்ளது என்ற கணக்கினை அறியவே, திமுகவின் மேலிட தலைவர்கள் ஆர்வமாக உள்ளார்களாம்.

ராமதாஸ்
வடமாட்டங்களை பொறுத்தவரை, 12 முதல் 18 இடங்கள் வரை கிடைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் தரப்பு உறுதியாக நம்பினாலும் நிஜ நிலவரமும், டிரான்ஸ்பர் ஆன வாக்குப்பதிவையும் வைத்து பார்க்கும்போது, அப்படி இல்லை என்கிறார்கள்.. அதேபோல, தென்மண்டலங்களிலும் தினகரனின் சரவெடி வியூகம் அதிமுகவுக்கு மைனஸை தந்து, திமுகவை தூக்கிவிட்டுவிடும் என்கிறார்கள்.. கொங்கு மண்டலத்தில் மட்டுமே அதிமுகவுக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்பதால், அந்த 50 இடங்களும் இந்த மண்டலத்துக்குள் அடைபடுமோ என்ற ஐயமும் திமுகவுக்கு எழுந்துள்ளது..

அமைதி
ஆனால் அதிமுகவை பொறுத்தவரை, எடப்பாடி தரப்பு அமைதியாகவே அனைத்தையும் அணுகி வருகிறாராம்.. யார் எந்த பக்கம் இருந்தும் ரிப்போர்ட் தந்தாலும், நிலவரத்தை சொன்னாலும், யூகத்தை சொன்னாலும், கணிப்பை சொன்னாலும், அவ்வளவையும் காது கொடுத்து கேட்டு கொள்கிறாராம்.. மாறாக எந்தவிதமான நம்பிக்கையிழந்த வார்த்தைகளையும் உதிர்க்கவில்லையாம்... அதிமுக மட்டுமல்ல, திமுக தரப்பில் வெளியாகும் ரிப்போர்ட்களை பற்றியும் அமைதியாகவே கவனித்து வருகிறாராம் எடப்பாடியார்.

ஸ்வைப்
இப்போது விஷயம் என்னவென்றால், அந்த 50 தொகுதிகள் யாருக்கு சாதகமாக இருக்க போகிறது என்பதுதான்.. யார் ஸ்வைப் செய்ய போகிறார்கள்? அடுத்து வரும் ஆட்சி மெஜாரிட்டியுடன் அமைய போகிறதா? அல்லது தொங்கு ஏற்பட்டுவிடும் சூழல் ஏற்படுமா? என்பதுதான்.. ரிசல்ட் வந்தால்தான் எல்லாமே தெரியவரும்.. பார்ப்போம்..
-
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்!












Click it and Unblock the Notifications