எனக்கு கூடத்தான் 7 நாட்களாக தூக்கம் வரல! நீதிமன்றம் மீது நம்பிக்கை கொண்ட கட்சி திமுக! -R.S.பாரதி
சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் எடுத்துச் செல்வோம் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது. இதனிடையே அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

மேலும், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து படித்தபிறகு தமக்கு 3 நாட்களாக தூக்கம் வரவில்லை என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, தனக்கு கூடத்தான் 7 நாட்களாக தூக்கம் வரவில்லை என்றும் தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோய் என்று மருத்துவரை தான் பார்க்க வேண்டும் எனவும் நீதிபதியை நேரடியாக குறிப்பிடாமல் சூசகமாக விமர்சித்தார்.
மேலும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் மீதான வழக்கு குறித்து அண்ணாமலை பேசிய பிறகு தான் நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ் இதனை தாமாக முன் வந்து விசாரிக்கிறார் என நினைக்கிறீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு அதனை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன் என ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தார்.
நீதிமன்றம் மீது திமுகவுக்கு நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது என்றும் நீமன்றம் மூலம் பல வெற்றிகளை பெற்ற இயக்கம் திமுக எனவும் குறிப்பிட்டார். இதனிடையே கூட்டத்தில் பேசியதற்காக தமது மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதும் இதே நீதியரசர் தான் என்றும் ஆனால், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.
எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது எனக் கூறிவிட்டு முடிந்து போன வழக்கை மீண்டும் விசாரித்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவேன் என்கிறாரே என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீதான தனது அதிருப்தியை சூசகமாக வெளிப்படுத்தினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications