தேர்தல் பிரச்சாரத்திற்கு வியூகம்.. டிச. 20ம் தேதி திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மா.செ.க்கள் கூட்டம்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், டிசம்பர் 20ம் தேதி, மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என்று, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 20-12-2020, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி அளவில், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயம்,"கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும்.
ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள்..ஒரே போடாக போட்ட ஸ்டாலின்.. செம "அட்டாக்"
அதுபோது, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2021-சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்படும். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.