பிரதமர் மோடியுடன் திடீரென தொலைப்பேசியில் பேசிய முக ஸ்டாலின்! இதுதான் காரணம்!
சென்னை: உயர்நீதிமன்றம் அளித்த ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பை அமல்படுத்தக்கோரி பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதுகலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அமைப்புகள் வழக்கு தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓபிசி இடஒதுக்கீட்டை முதுகலை மருத்துவ படிப்பில் அமல்படுத்த வேண்டும் என்றும், இதுபற்றி மத்திய அரசு 100 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் முதுகலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார்.

இதன் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைப்பேசியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியிருக்கிறார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான், இதன் அடுத்தகட்டமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பேசினேன். முன்னுரிமை மற்றும் மாநில இடஒதுக்கீடு சட்டங்களை அரசு ஆதரிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். பாதுகாப்பற்றவர்களை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Recommended Video
-
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications