Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏன் விஜய் உங்களுக்கு மனுஷ வாடையே ஆகாதா? 15 வார்த்தையை வச்சிகிட்டு.. ஐயோ! கரு. பழனியப்பன் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:விஜய் உங்களுக்கு மனுஷ வாடையே ஆகாதா? ஏன் ஒரு மேடை போட்டு அதில் 4 நிர்வாகிகளை நிற்க வைத்து, அவர்களுடன் பேச முடியாதா, தனியாக பேருந்தில்தான் பேசுவீர்களா என திமுகவை சேர்ந்த கரு.பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசுகையில், ஈரோட்டுல பொதுக் கூட்டம் நடந்த இடம் 80 ஏக்கர். அந்த இடத்தில் ஒரு மேடை போட்டு கூட ஒரு 4 நிர்வாகிகளை நிற்க வைக்க முடியாதா? பஸ்ல தனியார் நின்று பேசுகிறார். ஏன் மேடை போட்டு ஒரு 4 பேர் பக்கத்துல நிற்க முடியாதா?

vijay tvk karu palaiappan

உங்களுக்கு மனுஷ வாடையே ஆகாதா? செங்கோட்டையன் பக்கத்துல நின்றால் சவமாகிவிடுவீங்களா, மேடை போட்டா பக்கத்துல ஆள் நிப்பாங்க, நின்றால் தோள்கள் உரசும். இதுதான் மாற்றமா? வைப் பண்றீங்களா? இதுதான் பிளாஸ்ட்டா, ஒரு 15 வார்த்தையை வச்சிக்கிட்டு இவர் படுத்துற பாடு இருக்கே ஐயோ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், விஜய் நல்லது செய்யவே அரசியலுக்கு வந்திருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். ஆனால் இதுவரை ஏதாவது நல்லது நடந்திருக்கிறதா? கட்சி ஆரம்பித்து இன்னும் ஒரு பொதுக் கூட்டம் கூட நடத்தவில்லை, இதில் புஸ்ஸி ஆனந்தே வெளியே வா என சொந்த கட்சிக்காரர்களே போராட்டம் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் எப்படி நல்லது நடக்கும்?

பெரியார் குறித்து பேப்பர் இல்லாமல் விஜய் பேசிடட்டும். ஒரு நிமிடம் பேசினால் கூட போதும். பிறகு என்ன சொன்னாலும் நான் செய்கிறேன். தமிழகத்தில் திராவிடத்தை விட்டுவிட்டு யாரெல்லாம் விலகுகிறார்களோ அவர்களை காலம் அடித்து உள்ளே கொண்டு வரும்.

கேரக்டரை புரிஞ்சிக்க மாட்டீங்களே என சொன்ன விஜய், அடுத்த வரியில் நாங்கலாம் வேற மாதிரி என்கிறார். இவர்களுக்கு vocabulary-யே தெரியாது. சிந்தனை கிடையாது. ஏதோ 15 வார்த்தைகளை வைத்துக் கொண்டு பேசி வருகிறார். அவருக்கு தெரிந்ததெல்லாம் பிளாஸ்ட், வைப், வேற மாதிரி இவைதான். யாராவது இலக்கியவாதி வந்து எழுதி கொடுத்தால் பேசுவார்.

விஜய்க்கு பெரும் கூட்டம் கூடியது. இதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அந்த பெருங்கூட்டம் போகும் போது வீட்டிற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறது என்பதுதான் முக்கியமாக கவனிக்க வேண்டியது. விஜய்க்கு கூடும் இளைஞர்கள் கூட்டத்தை திருத்த வேண்டும். இவர்கள் எல்லாம் தற்குறிகள்தான். நாமக்கல்லில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்திய கட்சிக்காரரை போலீஸார் அடித்ததும் வழிவிடுகிறார்கள். எனவே கட்சி இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

சினிமா போல் நினைத்துக் கொண்டு சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளை செய்கிறார்கள். ஜட்ஜ் சொன்னாலே போலீஸ் கேட்கலை, இந்த தற்குறிகள் சொன்னாவா கேட்டுட போறாங்க? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பக்கமா, இல்லை அரசு பக்கமா என்பதை தெளிவாக சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு யாரையும் சாராமல் ஏதோ சில கருத்துகளை கூறிவிட்டுச் சென்றால் என்ன அர்த்தம் என பல்வேறு கேள்விகளை அவர் முன் வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+