திருச்சி சிவா எம்.பி. மீது திமுக பேச்சாளர்கள் அதிருப்தி..!
திமுக கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள திருச்சி சிவா மீது அக்கட்சியின் சொற்பொழிவாளர்கள் அதிருப்தியில் உள்ளார்களாம்.
தமிழகத்தில் பேசி, பேசியே பேச்சாளர்களால் வளர்க்கப்பட்ட கட்சி திமுக. அண்ணா தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை மக்களின் நாடித்துடிப்பை அறிந்து பொதுக்கூட்டங்களில் முழங்குவது அந்தக் கட்சிக்கு கைவந்த கலை. இப்படி பேச்சாளர்களால் வளர்க்கப்பட்ட கட்சியின் சொற்பொழிவாளர்கள் பிரிவில் தற்போது கோஷ்டிப்பூசல் வெடித்துள்ளது.
தலைமை அனுமதி பெறாமல் நிதி வசூல்
நீலகிரி இயற்கை பேரிடருக்காக திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் தலைமையின் அனுமதி பெறாமல், அதுவும் ஸ்டாலின் கேட்காமலேயே சொற்பொழிவாளர்களும் நிதி தர வேண்டும் என ஒப்பிலாமணி என்ற பேச்சாளர் கட்டாயப்படுத்தியுள்ளார்.
சட்டசபை இடமாறியபோது சொந்த கடையில் பர்னிச்சர்களை பதுக்கிய முன்னாள் சபாநாயகர்.. ஆந்திரத்தில் பரபரப்பு
நிதிக்கு எங்க்கே போவோம்?
நிதி வசூல் தொடர்பாக மூத்த திமுக சொற்பொழிவாளர் ஒருவரை நாம் தொடர்பு கொண்ட பேசிய போது, மாவட்டச் செயலாளர்கள் பேச்சாளர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டுமே கூட்டங்களுக்கு அழைத்து, அவர்களின் சட்டைப்பையை நிறைத்து அனுப்புகின்றனர். அதுவும் மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்டச்செயலாளர் தனது சொந்தப்புராணத்தை கட்சியினர் மத்தியில் புகழ் பாடுபவர்களுக்கு மட்டுமே அடிக்கடி வாய்ப்பு வழங்குவார். பல பேச்சாளர்கள் ஏழ்மையில் தான் உள்ளனர். அவர்களிடம் நிதி கொடுக்கச் சொன்னால் எங்கிருந்து தருவார்கள் எனக் கேட்கிறார்.
சிவா மீது அதிருப்தி
சொற்பொழிவாளர்கள் பிரச்சனையில் திருச்சி சிவா தலையிடுவதில்லை என்றும், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என்ற முறையில் தொடர்பு கொள்ள முயற்சித்தால் கூட ஆளை பிடிக்கமுடியவில்லை எனவும் அக்கட்சியின் பேச்சாளர்கள் மத்தியில் அதிருப்தி குரல் ஒலிக்கிறது.