விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு
சென்னை: திமுகவில் இருந்த 1,000 ஒன்றியச் செயலாளர்களில் திடீரென 113 பேர் தவெக பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் மிரண்டு போயிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் உடனடியாக திமுகவின் அவசர பொதுக்குழுவை கூட்டி அமைப்பு தேர்தலை நடத்தவும், மாவட்டங்களை பிரித்து இளைஞர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்வியிலிருந்து திமுக மீண்டு வருவதற்குள், கட்சியின் அடிமட்டத் தூண்களாகக் கருதப்படும் ஒன்றியச் செயலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மொத்தமாக மாற்று முகாமிற்குத் தாவியிருப்பது அறிவாலய வட்டாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

திமுகவில் இருந்த சுமார் 1,000 ஒன்றியச் செயலாளர்களில், திடீரென 113 பேர் மொத்தமாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் இணைந்துள்ளனர். இந்தத் தகவல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடும் அதிர்ச்சிக்கும், மிரட்சிக்கும் உள்ளாக்கியுள்ள நிலையில் கட்சியைச் சீரமைக்க அவர் போர்க்கால அடிப்படையில் களமிறங்கியுள்ளார்.
திமுகவின் தேர்தல் தோல்விக்குப் பின் அக்கட்சியின் உட்கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, தவெக தலைமை இந்த ரகசிய ஆப்ரேஷனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுகவின் வாக்கு வங்கியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கும் 113 ஒன்றியச் செயலாளர்கள் ஒரே நேரத்தில் தவெக பக்கம் சாய்ந்திருப்பது திமுகவின் அடிமட்டக் கட்டமைப்பைப் பதம் பார்த்துள்ளது.
தேர்தல் தோல்வியைக் காட்டிலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த அளவுக்குக் கசிவது திமுக தலைமைக்குத் தர்மசங்கடத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உள்கட்சித் துரோகிகளைக் கண்டறியும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தால் சுதாரித்துக் கொண்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடனடியாகச் சேதத்தைத் தடுக்க அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, திமுகவின் அவசர பொதுக்குழுவைக் கூட்டி, உடனடியாக உள்கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சிக்குத் துரோகம் செய்தவர்களை நீக்கிவிட்டு, புதிய முகங்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியைத் தற்காத்துக் கொள்ளவும், தவெக-வின் இளைஞர் ஈர்ப்பு வியூகத்தை முறியடிக்கவும் திமுக தற்போது புதிய அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளது.
திமுகவில் அமைப்பு ரீதியிலாக இருக்கும் மாவட்டங்களை அதிகரித்து, அதில் 50 வயதிற்கு குறைவானவர்களை பொறுப்புக்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இன்னொரு சீனியர்கள் பலரையும் பொறுப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாகவே மாவட்டங்கள் அதிகளவில் பிரிக்க திமுக தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications