People's Pulse survey: தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும்! முதல் தேர்தலிலேயே அடித்து தூக்கும் விஜய்?
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும் என்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 18 முதல் 24 தொகுதிகளில் வெல்லும் என People's Pulse கணித்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது சதவீதம் அளவில் உயர்ந்திருந்தாலும் கடந்த காலங்களை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை பொருத்தமட்டில் பெரிய அளவில் வாக்குப் பதிவில் புரட்சி நடக்கவில்லை என்றே நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக தேர்தல் முடிந்ததுமே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். ஆனால் இந்த முறை மேற்கு வங்கத்தின் 2ஆம் கட்ட தேர்தல் இன்று (ஏப்.29) முடிவடைந்ததால் எக்சிட் போல்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.
தற்போது மேற்கு வங்க தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தமிழகம், புதுவை, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான எக்சிட் போல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் தனி பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக 133 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பலத்தை பெற்றது. அது போல் அதிமுக 66 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும் பாமக 5 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும் வென்றன.
இந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. அதில் People's pulse கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 125- 145 தொகுதிகளில் வென்று திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.
அது போல் அதிமுக கூட்டணி 65- 80 தொகுதிகளிலும் தவெக 18 முதல் 24 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகிறது என்ற நிலையில் திமுக கூட்டணி 125- 145 தொகுதிகளில் வெல்லும் என கணித்துள்ளது.
தவெக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய நிலையில் பீப்பிள்ஸ் பல்ஸ், சாணக்கியா ஸ்ட்ராட்டெஜிஸ் ஆகிய கருத்துக் கணிப்பில் தவெக கணிசமான தொகுதிகளில் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications