Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என் பங்கு ரூ.25 லட்சம்".. மகிழ்ச்சியுடன் உதவிய உதயநிதி ஸ்டாலின்.. புன்னகையுடன் வாங்கி கொண்ட "அப்பா"

நிவாரண நிதிக்காக முதல்வரிடம் உதயநிதி 25 லட்சம் வழங்கினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

Recommended Video

    மகிழ்ச்சியுடன் கொடுத்த Udhayanidhi.. புன்னகையுடன் வாங்கிக்கொண்ட MK Stalin | Oneindia Tamil

    தமிழகத்தில் தற்போது 2வது அலை வேகமாக பரவி வருகிறது... இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன... லாக்டவுனும் போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    நிதி

    நிதி

    முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பப்படும் நிதி, கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் உறுதி அளித்திருந்தார்.. முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் , அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர்.

     வேண்டுகோள்

    வேண்டுகோள்

    அந்த வேண்டுகோளை ஏற்று, நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்... மேலும், திமுக அறக்கட்டளையின் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வழங்கினார். இதேபோல, விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் முதல்வரை சந்தித்து 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை அளித்தார்.

     உதயநிதி

    உதயநிதி

    இந்நிலையில், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கி உள்ளார். இதுகுறித்து ஒரு ட்வீட்டும் பதிவிட்டுள்ளார்..

    வேண்டுகோள்

    வேண்டுகோள்

    அதில், மாண்புமிகு தமிழக முதல்வர்-தலைவர் @mkstalin அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினேன்.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு பெருந்தொற்றை வெல்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    பாராட்ட

    பாராட்ட

    இதையடுத்து இந்த ட்வீட்டுக்கும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.. "நன்கொடை தந்த எங்கள் இளைய சூரியனுக்கு வாழ்த்துக்கள்.. இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் காப்பாற்ற ஒன்றிணைந்து போராடுவோம் அண்ணா" என்று பதிவிட்டு வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+