சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: திமுக மகளிரணியினர் நாளை கோலமிட்டு போராட்டம்- கனிமொழி
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்ததுக்கு எதிராக திமுக மகளிரணியினர் நாளை வீடுகளில் கோலமிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்று திமுக மகளிரணியின் செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை பெசன்ட்நகரில் இன்று காலை குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கோலம் போட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இந்நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக மகளிரணியினர் நாளை தமது வீடுகளில் NO CAA, NO NRC என்ற வாசகங்களுடன் கோலமிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என அதன் செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான கனிமொழி அழைப்பு விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications