Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனா ஜெயக்குமார் திமுகவிலிருந்து நீக்கம்! ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை! அச்சத்தில் நிர்வாகிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

    DMK-விலிருந்து Meena Jayakumar நீக்கப்பட்டதன் பின்னணி | Oneindia Tamil | Oneindia Tamil

    கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

    கோவை மேயர் வேட்பாளராக பேசப்பட்ட நிலையில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடக் கூட திமுக தலைமை சீட் கொடுக்காததால் அண்மையில் தனது ஆதங்கத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் கொட்டித்தீர்த்தார் மீனா ஜெயக்குமார்.

    அதிரடி நடவடிக்கை

    அதிரடி நடவடிக்கை

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு பிறகும் மறைமுகத் தேர்தலுக்கு பிறகும் திமுகவில் வரிசையாக பல முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கட்சியினர் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறார் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின். நகரச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர் என சஸ்பெண்ட் பட்டியல் நீண்ட நிலையில் மகளிர் அணி மாநில நிர்வாகியான மீனா ஜெயக்குமாரும் இப்போது நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார்.

    சீட் இல்லை

    சீட் இல்லை

    இதனால் முன்னணி நிர்வாகிகள் பலர் அடுத்தது அந்த லிஸ்டில் நமது பெயர் வந்துவிடுமோ என அச்சத்தில் உள்ளனர். மீனா ஜெயக்குமாரை பொறுத்தவரை கோவையை சேர்ந்தவர். திமுக மகளிர் அணியில் தொண்டர் அணி துணைச் செயலாளராக இருந்து வந்தார். சிங்காநல்லூர் பகுதியில் கவுன்சிலர் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பல லட்சங்களை செலவும் செய்தார். ஆனால் வேட்பாளர் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    இதனால் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருந்து வந்த மீனா ஜெயக்குமார், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சிங்காநல்லூர் கார்த்திக்கை எல்லோர் முன்னிலையிலும் கடுமையாக விமர்சித்தார். இது மேடையிலிருந்த அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. கோவை மேயர் வேட்பாளராக கார்த்திக் மனைவி இளஞ்செல்வி தான் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீனா ஜெயக்குமார் போட்ட முட்டுக்கடையால் புதுமுகமான கல்பனாவுக்கு யோகம் அடித்தது.

    ஒழுங்கு நடவடிக்கை

    ஒழுங்கு நடவடிக்கை

    இதனால் மீனா ஜெயக்குமார் மீது கடும் கோபமுற்ற கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக், அவரை கட்சியிலிருந்து நீக்குமாறு அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் தலைமைக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மீனா ஜெயக்குமாரை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் தற்காலிகமாக நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+