கின்னஸ் சாதனை தயார்? 85 லட்சம் நீட் கையெழுத்து? ட்ரோன் ஷோ ரெடி! டாப் கியரில் உதயநிதி?
சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு முறை இயற்கை பேரிடரால் ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2வது மாநாடு 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காகத் தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் ஒருநாள் முன்னதாகவே சேலம் செல்ல இருக்கிறார்.

திமுக வரலாற்றில் 16 ஆண்டுகள் கழித்து நடக்கும் மாபெரும் வைபவம். அதாவது 14 ஆண்டுகள் ராமர் வனவாசம் சென்றதாக ராமாயணத்தில் படிக்கிறோம். கம்பன் அந்தக் காலத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.
ஆனால், அந்த ராமாயண கருத்தியலுக்கு முற்றிலும் எதிரான இயக்கம் திமுக. அந்த இயக்கத்தில் அதைவிடப் பெரிய அளவுக்கான காலம் காத்திருந்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதற்காக ஒப்பிட்டுச் சொல்கிறோம்.
இந்த மாநாட்டின் ஹைலைட்ஸ் என்ன? அதைப்பற்றி சில தகவல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டி உள்ளது.

முதலில் இந்த சேலம் மாநாடு பெத்தநாயகன்பாளையம் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள அரங்கில் நடைபெற உள்ளது. இதற்காக 105 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு வளாகம் அமைக்கப்படு, அங்கே பிரம்மாண்ட மேடையும் போடப்பட்டுள்ளது.
இது இரண்டாவது இளைஞரணி மாநாடு என்பது மிகமிக முக்கியம். முதல் மாநாடு அப்பா ஸ்டாலின் தலைமையில். இரண்டாவது மாநாடு மகன் உதயநிதி தலைமையில் நடக்கிறது.
சேலம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகேதான் உள்ள இந்தப் பெத்தநாயகன்பாளையம் என்ற ஊர். அங்கே அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுப் பந்தலை இன்றே பொதுமக்கள் வந்து பார்வையிடத் தொடங்கிவிட்டனர். ஏறக்குறைய தற்காலிக டூரிங் ஸ்பாட் ஆகி உள்ளது இந்த இடம்.
மாநாட்டுக்கு வருகைதரும் அத்தனை இளைஞரணி தொண்டர்களுக்கும் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டர்களுக்காக ஒன்றரை லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளது.

4லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என உதயநிதி ஸ்டாலினே சொல்லி இருக்கிறார்.
இம்மாநாட்டு நுழைவாயிலில் பெரியார் புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. அதே வரிசையில் அண்ணா, கலைஞர் ஆகியிருக்கும் நுழைவு வாயில் உள்ளது. அதைப்போலவே ஸ்டாலின், உதயநிதிக்கும் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. ஆக, திராவிட இயக்கத்தின் தலைவர்களின் வரிசையில் உதயநிதியும் இடம்பிடித்துள்ளார்.
இதனைக் கடந்து உள்ளே சென்றால், 'முரசொலி' மாறன் பெயரில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக திமுக இளைஞரணி வரலாற்றை எடுத்துச் சொல்லும் விதமாகச் சிறப்புப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப் பட்டுள்ளது.
அதனை அடுத்து முரசொலி பழைய அலுவலக தோற்றத்தில் ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகப் புத்தக விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்ட உள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த மாநாட்டு அரங்கமே வேலூர் கோட்டையைப் போன்ற வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநாட்டு வளாகத்தில் முகப்புப் பகுதியில் பெரியார், அண்ணாதுரை, மு.கருணாநிதி, அன்பழகன் ஆகிய தலைவர்களுக்குச் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளன.
அமைச்சர்கள், விவிஐபிகளுக்கு மிக உயர்ந்த தரத்திலான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சிக் கொடியை ஏற்றுவதற்காக 100 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
தொண்டர்களின் வருகைக்கு ஏற்ப, கழிவறைகள், ஓய்வறைகள், சாப்பாட்டுப் பந்திக்கான அரங்கம் எனப் பல கோணங்களில் யோசித்து யோசித்து பிரம்மாண்டமாக ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த மாநாட்டில் மிகப்பெரிய ஹைலட் ஆக ட்ரோன்ஷோ ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்த ஷோன் ஷோ மூலம் கட்சியின் தலைவர்கள் வானத்தில் தோன்றி காட்சி தர உள்ளனர்.

மேலும் நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வாங்கிய 85 லட்சம் பேரின் கையெழுத்தை முதல்வரிடம் ஒப்படைக்க உள்ளார் உதயநிதி. அதன் பின்னர் அது ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்ட உள்ளது.
மொத்தம் 22 பேச்சாளர் பேசுகிறார்கள். அவ்வளவு பேருக்கும் தனித்தனி தலைப்புகள். 2 கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதில் சினிமா ஆடல் பாடல்கள் இல்லை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டை எப்படிப் புறக்கணிக்கிறது. திமுகவினால் தமிழ்நாடு அடைந்த பலன்கள் என்ன? இப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.
அதைப்போல் தெருக்குரல் அறிவு அம்பேத்கர், பெரியார், கலைஞரைப் பற்றி மூன்று பாடல்களைப் பாடுகிறார்.

இந்த மாநாட்டுக்கு 4 லட்சம் இளைஞர்கள் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். கின்னஸ் ரெக்கார்ட் செய்வதற்கான முயற்சி ஒரு பக்கம் நடக்கிறது.
இந்த மாநாடு பற்றி உதயநிதி ஒரு சிறப்பு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் அவர், "மதுரையில் அதிமுக ஒரு மாநாடு நடத்தியது. அதில் திமுகவைத் திட்டுவதுதான் ஒரே நோக்கமாக இருந்து. அந்த மாநாட்டில் போட்ட சாப்பாடு போட்டு பெரிய அளவில் காட்டினார்கள்.

இப்படி அதிமுக மாநாட்டைப் பிரம்மாண்டமாகக் காட்ட முயற்சி செய்தது. ஆனால், எங்கள் மாநாட்டின் பெயரே மாநில உரிமைகள் மீட்பு மாநாடு என்றுதான் வைத்திருக்கிறோம். அதற்கான காரணமே கடந்த 9 ஆண்டுகளில் அதிமுக நம் மாநிலத்தின் அத்தனை உரிமைகளையும் விட்டுக் கொடுத்துவிட்டது.
இந்த மாநாட்டில் நீட் எதிர்ப்பு மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகள் பட்டியல் போட்டுப் புரிய வைக்க இருக்கிறோம். இயக்கத்தின் வரலாறு என்ன என்பதை இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்

இந்த மாநாட்டுக்காக 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
-
அமைச்சர் பதவி யாருக்கு? சீனியாரிட்டி எல்லாம் Secondary-தான்? மா.செ. கூட்டத்தில் சொன்ன ஸ்டாலின்? -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications