பூர்வீக சொத்தில் யார் யாருக்கெல்லாம் பங்கு இருக்கிறது? சட்டம் சொல்வது என்ன?
சென்னை: இந்தியாவில் பூர்வீக சொத்து குறித்த சட்டங்கள் எப்படி நடைமுறையில் இருக்கின்றன? என்பதை தெரிந்து கொள்ளலாம். வாரிசு உரிமை, சொத்து உரிமை உள்ளிட்ட விதிமுறைகள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.
இதுகுறித்து சுயதொழில் தொடங்குவோம் என்ற எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தங்கள் பெற்றோரின் விருப்பங்களின்படி பூர்வீக சொத்துகளில் இருந்து சில சமயம் வெளியேற்றப்பட்டதாக பிள்ளைகள் நினைக்கின்றனர். அதே சமயம் பூர்வீக சொத்து வெளியேற்ற சட்ட விதிகளின்படி பிள்ளைகளை வெளியேற்றுவதற்கு பெற்றோருக்கு எந்தவித உரிமையும் இல்லை.

வாரிசு உரிமை மற்றும் சொத்து உரிமை ஆகியவை தொடர்பான விதிமுறைகள் எப்போதுமே புரிந்து கொள்ள சற்று கடினமானவையாக தோன்றும். குறிப்பாக பூர்வீக சொத்து உரிமை சட்டங்கள் மற்றும் சொத்து வெளியேற்ற விதிமுறைகள் ஆகியவை சாமானியர்களுக்கு புரியாத ஒன்றாகவே தோன்றும்.
தங்கள் பெற்றோரின் விருப்பங்களின்படி பூர்வீக சொத்துகளில் இருந்து சில சமயம் வெளியேற்றப்பட்டதாக பிள்ளைகள் நினைக்கின்றனர். அதே சமயம் பூர்வீக சொத்து வெளியேற்ற சட்ட விதிகளின்படி பிள்ளைகளை வெளியேற்றுவதற்கு பெற்றோருக்கு எந்தவித உரிமையும் இல்லை.
இந்த சட்ட பாதுகாப்பு விதிமுறை மூலமாக, பூர்வீக சொத்துகளில் உரிமை இல்லை என்று ஏதேனும் ஒரு பிள்ளைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தால், அதுகுறித்து அவர்கள் நீதிமன்றத்தில் சட்ட வழக்கு தொடர்ந்து தங்களுக்கான உரிமையை முறைப்படி பெறலாம்.
பூர்வீக சொத்து என்றால் என்ன
ஒரு நபரின் தாத்தா அல்லது பாட்டி ஆகியோரிடம் இருந்து கிடைக்கப்பெறும் சொத்துக்கள் தான் பூர்வீக சொத்துக்கள் என்பார்கள். பொதுவாக இது 4 தலைமுறைகளை கடந்த சொத்தாக இருக்கும். சட்ட விதிமுறைகளின் படி மகன்கள் மற்றும் மகள்கள் ஆகிய அனைவருக்கும் பூர்வீக சொத்துகளில் உரிமை உண்டு. ஆனால், பூர்வீக சொத்து என்ற அடிப்படையில் இருந்து பெற்றோர் சொந்தமாக கைப்பற்றிய சொத்து என்ற வகையில் மாறினால், அந்த சொத்துக்களில் இருந்து பிள்ளைகளை வெளியேற்றுவதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. ஹிந்து சொத்துரிமைச் சட்டம் 1956ன் படி, விதிமுறைகள் 4, 8, மற்றும் 19 ஆகியவை பூர்வீக சொத்து தொடர்பான அம்சங்களை கொண்டுள்ளன.
பூர்வீக சொத்துகளில் பங்கு உரிமை
ஒவ்வொரு தலைமுறையிலும் உள்ள தனி நபர்களின் எண்ணிக்கை பொறுத்து பூர்வீக சொத்துகளில் இருந்து கிடைக்கும் பங்குகளின் அளவு மாறுபடும். இது தனி நபருக்கான பிரிவினை என்ற அடிப்படையில் இருக்காது. ஆனால் ஒரு தந்தைக்கான பங்கு என்ற அடிப்படையில் அமையும்.
ஒரு தந்தைக்கு ஒரே ஒரு குழந்தை இருக்கிறது என்றால் அந்த சொத்துக்களின் பங்கு முழுவதும் ஒரே குழந்தையை மட்டுமே சேரும். ஒருவேளை உடன் பிறந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு சம பங்கு உரிமை கிடைக்கும்.
சொத்து வகை வேறுபாடு
பூர்வீக சொத்து மற்றும் சொந்தமாக கையகப்படுத்திய சொத்து ஆகிய இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. தந்தை வழி வந்து சேர்ந்த சொத்துக்கள் அனைத்துமே பூர்வீக சொத்துக்கள் என்று கருதப்படும். சில சமயம் எதுவுமே கையகப்படுத்திய சொத்துக்களாக வகைப்படுத்தப்படலாம். அதேசமயம் தாய் வழி தாத்தா, பாட்டி மற்றும் மாமா போன்றவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற சொத்து கையகப்படுத்திய சொத்தாக கருதப்படும்.
சம பங்கு உரிமை
பூர்வீக சொத்தை பிரித்துக் கொடுப்பது என்று ஒரு தந்தை முடிவு செய்தால், மகன்கள் மற்றும் மகள்கள் ஆகிய அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் மகள்களுக்கு சொத்துரிமை கிடைக்காத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலமாக பூர்வீக சொத்துகளில் மகள்களுக்கும் சம பங்கு உரிமை உண்டு என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1nuCyuUgfIzhN6scjItjMsAdInc4elxw1/view?usp=sharing
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications