ரூ.6 தினமும் கட்டினால் 1 லட்சம் கன்பார்ம்.. குழந்தையின் எதிர்காலம் பற்றி கவலை வேணாம்.. மாஸ் திட்டம்
சென்னை: அனைவராலும் வரவேற்கப்படும், மிகச்சிறந்த ஆயுள் காப்பீடு திட்டம்தான் பால் ஜீவன் பீமா யோஜனா. இந்த திட்டத்தின் பலன்கள் என்ன? எப்படி இணைவது தெரியுமா?
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், சேமிப்பு திட்டங்கள் ஏராளமான உள்ளன.. முதியவர்களுக்கும் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன.. அந்தவகையில், குறைந்த முதலீட்டில் அமலாக்கப்பட்ட திட்டம்தான் "பால் ஜீவன் பீமா யோஜனா"

ஆயுள் காப்பீட்டு திட்டம்: இந்த திட்டமானது குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.,, வெறும் 6 ரூபாய் செலுத்தி ரூபாய், ஒரு லட்சம் வரையிலான காப்பீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.
அதன்படி, பெற்றோர்கள் போஸ்ட் ஆபீஸ் கணக்கில் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 6 மட்டுமே டெபாசிட் செய்தால் போதும். இதன்மூலம் உங்களது குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் மேம்படுத்தலாம். வரப்போகும் கல்வி செல்வுகள் குறித்தும் கவலைப்படாமல் இருக்கலாம்.
குழந்தைகள்: குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ.6 முதல் ரூ.18 வரையிலான பிரீமியம் டெபாசிட் செய்யலாம். 5 வருடத்துக்கு தினமும் ரூ.6 பிரீமியமாக டெபாசிட் செய்தால், மொத்தம் 20 வருடங்களுக்கு 18 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டிவரும். பாலிசி முதிர்ச்சியடைந்தவுடன், ரூ. 1 லட்சத்தை எளிதாக பெறலாம். இதில், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம்.. அதேபோல கடன் வசதி எதுவும் இல்லை..
குழந்தைகளுக்கான பால் ஜீவன் பீமா யோஜன திட்டத்தை பெற வேண்டுமானால், பெற்றோரின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. 2 குழந்தைகளுக்கு மட்டுமே பாலிசியை பெறலாமே தவிர, 3வது குழந்தைக்கு முதலீடு செய்ய முடியாது. 5-20 வயது குழந்தைகள் பெயரில் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
பால் ஜீவன் பீமா : பால் ஜீவன் பீமா காப்பீட்டு திட்டத்தில் முதலீடு செய்த குழந்தைகள் எதிர்பாராத விபத்தில் இறந்து விட்டால், அவர்களின் பெயரில் ரூ.1,00,000 வரையில் ஆயுள் காப்பீட்டு தொகை கிடைக்கும். முதலீடு செய்த குழந்தைகளின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென்றால் அவர்களது 20 வயதிற்கு பிறகு முதிர்வு தொகையும், அதற்கான வட்டியும் கிடைக்கும். இந்தத் திட்டத்தில், முதிர்ச்சியின்போது ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால், அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று உரிய விண்ணப்பங்களை தந்து விண்ணப்பிக்கலாம். உங்களது பெயர், வயது மற்றும் முகவரி என்று குழந்தை பற்றிய விவரங்களும், நாமினி பற்றிய விவரங்களையும் பிழையின்றி நிரப்பி தர வேண்டும்.
அடையாள அட்டை: அதேபோல, குழந்தையின் அடையாள அட்டையையும், முகவரிக்கான அடையாள அட்டையையும் வழங்க வேண்டும். அந்தவகையில், 8 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். ஆனால், விண்ணப்பிக்கும் போது குழந்தைக்கு என்ன வயது இருக்கிறதோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications