ரூல்ஸ் வந்தாச்சு.. இனி வேகமாக வண்டி ஓட்டினால் ரூ.1000.. "இவங்களுக்கு" மட்டும் ரூ.25,000 அபராதம்! செம
சென்னை: டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகளுக்கான அதிரடி அறிவிப்பு ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
அடுத்த மாதம் ஜுன் 1ம் தேதி முதல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் சில மாற்றங்களை, மத்திய அரசின் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதில், புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிவித்து, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான முறையையும் எளிதாக்கியிருக்கிறது..

சான்றிதழ்கள்: அந்தவகையில, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு இனிமேல் போக்குவரத்து அலுவலத்தில் தேர்வு எழுத வேண்டியதில்லை.. ஓட்டுனர் உரிமம் பெற போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் திறன் தேர்வு எழுத வேண்டிய அவசியமும் இல்லை. அதற்கு பதிலாக, தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் இனி ஓட்டுநர் திறன் தேர்வுகளை நடத்தி சான்றிதழ்களை வழங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதற்காக, தனியார் ஓட்டுனர் பயிற்சி மையங்களுக்கு பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க குறைந்தது 1 ஏக்கர் நிலம் தேவை. கனரக வாகனங்களுக்கான பயிற்சி மையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் தேவை. இந்த மையங்களில் தகுந்த தேர்வு நடத்துவதற்கான விதிகள் இருக்க வேண்டும்.
பயிற்றுநர்கள்: பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 5 வருடங்கள் ஓட்டுனர் அனுபவம் உள்ளவர்களாகவும் இருப்பது அவசியம்..
'பயோமெட்ரிக்' மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படைகளை தெரிந்தது வைத்திருப்பதும் அவசியம். இலகு ரக வாகனங்களுக்கான பயிற்சி, குறைந்தது 4 வாரங்களும் அல்லது 29 மணி நேரம் இருக்க வேண்டும். கனரக வாகனங்களுக்கான பயிற்சி 6 வாரங்கள் அல்லது 38 மணி நேரமாக இருக்க வேண்டும். தனியார் பயிற்சி மையங்கள் அரசு அதிகாரிகளால் அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படும்.
விண்ணப்பம்: மத்திய அரசின் இந்த அறிவிப்பானது, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. காரணம், ஆர்டிஓ அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, LLR பதிவு செய்ய வேண்டும். பிறகு வாகன ஆய்வாளர் முன்பு வாகனத்தை ஓட்டிக்காட்ட வேண்டும். பிறகு, போட்டோ எடுத்துக்கொண்டு பிறகு நேரில் சென்று ஓட்டுநர் உரிமம் பெற்று கொள்ள வேண்டும்..
இந்த நடைமுறையைதான், தற்போது எளிமையாக்குகிறது மத்தியது அரசு... இந்த புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகளாக மாற்றப்படுகின்றன.
ஓட்டுநர் உரிமம் பெற விரும்புபவர்கள், தனியார் ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஓட்டுநர் தேர்வில் பங்கேற்கலாம்.. உரிம தகுதிக்கான சோதனைகளை நடத்தி சான்றிதழ் வழங்கவும் தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அபராதம்: அதேபோல, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000/- முதல் 2,000/- அபராதமும், வாகனம் ஓட்டும் மைனர் பிடிபட்டால் அவர்களுக்கு ரூ.25,000/- அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பயிற்சி நிறுவனங்களுக்கும் இதுபோலவே பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications