ரயிலில் இனி ஈஸியா சீட் கிடைக்கும்.. கரண்ட் டிக்கெட் புக்கிங் இருக்கே.. கடைசி நிமிடத்தில் செம சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அவசர தேவைகளுக்கு தட்கல் டிக்கெட்டை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை.. பயணிகளுக்கு கடைசி நேரத்தில் பயணம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுதான் கரண்ட் டிக்கெட் புக்கிங். இந்த புதிய வசதியின் மூலம், கரண்ட் டிக்கெட்டை எப்படி பெற வேண்டும் தெரியுமா? இதிலுள்ள வேறு வசதிகள் என்னென்ன?
அவசர நேரங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இந்த தட்கல் டிக்கெட் நமக்கானது தான் என்பதில் 50 சதவீதம் இல்லை என்பதே உண்மை.

தட்கல் புக்கிங்: காரணம், தட்கலில் செல்வதானாலும், 1 நாள் முன்னதாகவே ரிசர்வ் செய்ய வேண்டியிருக்கிறது. அதுமட்டுமலல, அப்படியே ரிசர்வ் செய்ய முயன்றாலும், அனைவருக்குமே டிக்கெட் கிடைத்து விடுவதில்லை. டிக்கெட் கிடைத்தாலும், கூடுதல் கட்டணம் செலுத்தியே வாங்க வேண்டியிருக்கிறது.

train irctc tatkal

ஆனால், மேற்கூறிய நடைமுறை சிக்கல்கள் எதுவுமே இல்லாமல், டிக்கெட்டே கிடைக்காமல் இருக்கின்ற நிலையிலும்கூட, அதுவும், ரயில் புறப்படுவதற்கு 5 அல்லது 10 நிமிடத்துக்கு முன்புகூட உங்களால், உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை பெற்று ரயிலில் பயணிக்க முடியும்.

கரண்ட் புக்கிங்: நாம் நமக்கான இருக்கையை தேர்வு செய்து அன்றைய நாள் பயணத்தையும் தொடரலாம் என்கிறது ஐஆர்சிடிசி. இந்த புதிய வசதிக்குதான் கரண்ட் புக்கிங் (current ticket booking) என்று பெயர். இந்த தற்போதைய டிக்கெட்டினை, ஐஆர்சிடிசி ஆப் அல்லது வெப்சைட்டில் சென்று, அன்றைய நாளுக்கான என்ற பயணம் செய்யும் நாளுக்கான டிக்கெட்டை நாம் தேர்வு செய்து கொள்ள முடியும்.. இந்த டிக்கெட்டை பயணம் செய்யும் நாளில் மட்டுமே நம்மால் எடுக்க முடியும்.

அதேபோல, ஒருமுறை தேர்வு செய்துவிட்டால், பிறகு, மறுபடியும் அதனை மாற்ற முடியாது. அதனால், ஆரம்பத்திலேயே கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.

பிரீமியம் தொகை: இந்த டிக்கெட்டுக்கான கட்டணம் தட்கல் மற்றும் பிரீமியம் டிக்கெட்டுகளுக்காக தொகை கூடுதலாக வசூலிக்கப்படாது. இந்த வசதி, தட்கலைவிட எளிதானது, கட்டணமும் குறைவு. சாதாரண டிக்கெட்டை விட 10-20 ரூபாய் மலிவானது. குறிப்பாக, ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பே கரண்ட் டிக்கெட்டை புக்கிங் செய்யலாம். இதன்மூலம் ரயிலில் காலியாக உள்ள சீட்டில் இருக்கையில் உட்கார்ந்தபடியே எளிதாக பயணிக்கவும் முடியும். ஆனால், பெர்த் காலியாக இருந்தால்தான், இந்த கரண்ட் டிக்கெட் கிடைக்கும்.

இந்த கரண்ட் டிக்கெட் எப்படி புக் செய்வது?

- ஐஆர்சிடிசி செயலியில், "ட்ரெயின்" என்ற பிரிவை தேர்வு செய்து, அதில் "ஏறும் இடம் மற்றும் இறங்கும் இடம்" இவகைளை கவனமாக தேர்வு செய்து பதிவிட வேண்டும்.

- இப்போது நமக்கு வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும். அதில் உங்களுக்கு தேவையான படுக்கை வசதி அல்லது AC வகுப்பு வசதியை தேர்வு செய்ய வேண்டும்

- இப்போது கரண்ட் இருக்கைகளின் எண்ணிக்கைகள் தென்படும். அதில் NOT AVAILABLE என்று வந்தால், அதில் கரண்ட் டிக்கெட் இல்லை என்று அர்த்தம். அப்படியிருந்தால், நாம் பயணம் செய்வதற்கு முன்பேயே இதனை புக் செய்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+