Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் புழல் சிறைக்கு வந்த செந்தில் பாலாஜி.. எந்த அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. என்னென்ன வசதிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை கஸ்டடி முடிந்து மீண்டும் புழல் சிறையில் எந்த அறையில் அடைக்கப்பட்டுள்ளார் தெரியுமா?

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்ததன் பேரில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

Do you know in which room Senthil Balaji is in Puzhal prison

இதையடுத்து செந்தில் பாலாஜி கடந்த 7ஆம் தேதி இரவு புழல் சிறையில் சில வழிமுறைகளை செய்த பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அன்று இரவு அவரிடம் எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து அவரிடம் அடுத்த நாள் காலை முதல் கேள்விகள் கேட்கப்பட்டன. செந்தில் பாலாஜியிடம் தினமும் 50 கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்றுடன் செந்தில் பாலாஜியின் அமலாக்கத் துறை கஸ்டடி நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து அவர் நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவருடைய நீதிமன்றக் காவல் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அமலாக்கத் துறை 3000 ஆவணங்களுடன் 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்திடம் தாக்கல் செய்துள்ளது. அதில் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றிருப்பதாக அமலாக்கத் துறை வழக்கறிஞர் தகவல் அளித்துள்ளார்.

செந்தில் பாலாஜி தவிர வேறு யாருடைய பெயரும் குற்றப்பத்திரிகையில் முக்கியம் இடம் பெறவில்லை. செந்தில் பாலாஜி தொடர்பான குற்றப்பத்திரிகை ஆவணங்கள் இரும்பு டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை கஸ்டடியில் எடுப்பதற்கு முன்பு செந்தில் பாலாஜி எந்த அறையில் இருந்தாரோ அதே அறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு அறை கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு சிறப்பு வசதிகள் உள்ளன. புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி சிறை கேன்டீனில் இருந்து இட்லி, தோசை கேட்டு பெறலாம். அதே போல் வீட்டிலிருந்தும் எடுத்து வர சொல்ல வேண்டுமானால் அவர் நீதிமன்றத்திடம் இருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். புழல் சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கான அறைகள் உள்ளன. மொத்தம் 9 அறைகள் முதல் வகுப்பு கைதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு அறை செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கொசு வலை, புதிய படுக்கை விரிப்பு, கட்டில் மெத்தை, சேர், மேஜை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. தினசரி நாளிதழ்களும் புத்தகங்களும் அவருக்கு வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+