நாத்தனார்.. தாய்மாமன், மருமகள்.. வலுசேர்க்கும் உறவுகளும், அதன் பெயர் முறைகளும்.. அடேங்கப்பா காரணம்
சென்னை: நம்முடைய தமிழகத்தில் ஒவ்வொரு உறவு முறைகளுக்கும் ஒவ்வொரு பெயரினை, முழு அர்த்தம் பொதிந்தபடியே நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு உறவு முறை குறித்து பார்ப்போம்.
அம்மான் என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? அம்மாவுடன் பிறந்தவர்களை குறிக்கும் ஆண்பால் சொல்லுக்கு அம்மான் என்று பெயர்.. இது பெரும்பாலும் தாய்மாமனை குறிக்கும் சொல்லாகும்..

பெயர்க்காரணம்: அப்பாவை அத்தன் என்று சொல்வார்கள்.. அத்தனின் உடன் பிறந்த பெண்களை, அத்தை என்று அழைக்கிறார்கள்.. எனவே, அத்தனுடன் பிறந்தவள் அத்தை என்பது போல, அம்மாவுடன் பிறந்தவரை அம்மான் என்பார்கள்..
அம்மாவின் உடன் பிறந்த ஆண், அம்மான் எனப்படுகிறார்.. இந்த அம்மான் என்ற சொல்லே, பிற்காலங்களில் மாமன் என்று மருவியது.. மாமன் என்பது மாமா என்று மருவிவிட்டது.. அம்மான், மாமனாகி.. மாமன் மாமாவாகி.. மாமா "மாம்ஸ்" என்று அழைக்கும் நிலைமை இன்று வந்துவிட்டது.
நாத்தனார்: அதேபோல, நாத்தனார் என்ற சொல் எப்படி வந்தது தெரியுமா? கணவருடைய உடன்பிறந்தவர் அதாவது கணவரின் சகோதரியை நாத்தனார் என்பார்கள்..
நாத்துணையார் என்ற சொல்லே, பிற்காலத்தில் நாத்தனாராக மாறிவிட்டதாம்.. அதாவது இதன்பொருள் "நாக்குக்கு துணை" என்பதாகும். காரணம், திருமணமாகி வரும், மாமியார் வீட்டிற்குள் புதுமணப்பெண்கள் வரும்போது, அந்த வீட்டில் பெரும்பாலும் பெரியவர்களே இருப்பார்கள்...
சகோதரி: எனவே, மணமகளை ஒத்த வயதில் அல்லது அவரது வயதுக்கு குறைந்தும் அல்லது அதிகமாக இருக்கும், கணவருடைய உடன்பிறந்த சகோதரியை "நாக்குக்கு துணை" என்பார்கள். அதாவது புதுமண பெண்ணுக்கு, பேச்சுத்துணையாக கணவரின் சகோதரிகள் இருப்பார்களாம்.. இதுவே நாளடைவில் நாத்தனார் என்ற சொல்லாக மாறிவிட்டது..
இந்த "நாத்தனார்" பெயருக்கு இன்னொருவகையான அர்த்தமும் சொல்லப்படுகிறது.. அதாவது நம்முடைய வீட்டில் பிறந்து வளரும் பெண் என்பவள், "நாற்று" போன்றவள்... எனினும் திருமணமாகி மாமியார் வீட்டுக்குள் சென்று, பிள்ளைகளை பெற்றுக்குலம் தழைக்க செய்வதும் இதே பெண்தான்..
நாற்று: அதாவது ஒருவீட்டில் வளர்ந்து, இன்னொரு வீட்டில் வாழக்கூடியவள்.. நம்முடைய வீட்டு நாற்றினை பறித்து இன்னொரு வீட்டில் நடும்போது, நாற்று அங்கு தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.. "நாற்று" போன்ற பெண் "நாற்றி" எனப்பட்டு, இதுவே நாளடைவில் திரிந்து "நாத்தி" என்றாகிவிட்டது.
"நாற்று அன்னார்" என்றால் நாற்று போன்றவள் என்று அர்த்தம்.. அதாவது, நாற்று + அன்னார் = நாற்றன்னார் = நாற்றனார் = "நாத்தனார்" என்றாகிவிட்டதாம்.
மாட்டுப்பெண்: அதேபோல, நாற்றுப் பெண், மாமியார் வீட்டில் மாற்று பெண்ணாக வந்து சேர்கிறாள்.. இந்த மாற்று பெண்தான், பின்னாளில் மருவி "மாட்டுப் பெண்" என்றாகிவிட்டதாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications