ஜெயலலிதாவின் "பேவரைட்".. எடப்பாடி மீண்டும் மீண்டும் கேட்ட சிவ்தாஸ் மீனா.. இந்த பின்னணி தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள சிவ்தாஸ் மீனா ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக பார்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல் தேர்வு செய்யப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு ஐஏஎஸ்ஸின் பதவிக்காலம் நாளையோடு முடிய உள்ளது. இந்த நிலையில் அடுத்த தலைமை செயலாளர் யார் என்பது தொடர்பான கேள்விகள் கடந்த சில நாட்களாக நிலவி வந்தன.

தற்போது தமிழ்நாடு தலைமை செயலாளராக இருக்கும் இறையன்பு நாளை ஓய்வு பெறுகிறார். இவரின் இடத்தை நிரப்ப முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் 5 பேர் கொண்ட லிஸ்டை தேர்வு செய்தார். அந்த லிஸ்டில் இருந்துதான் சிவதாஸ் மீனாவை முதல்வர் ஸ்டாலின் டிக் செய்துள்ளார்.
போட்டியில் இருந்தவர்கள் யார் யார்?: கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியான டி.வி.சோமநாதனும் இந்த போட்டியில் முதலில் முன்னணியில் இருந்தனர். இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார். 1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர் இருக்கிறார். இவரும் மூத்த அதிகாரி. கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்.

அதுல்யமிஸ்ரா இதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இவர் அரசின் டாப் தரப்பிற்கு மிகவும் நெருக்கம். அதோடு இவரும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். ஜித்தேந்திரநாத் ஸ்வைன் அதிகாரியும் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.
இந்த தலைமை செயலாளர் லிஸ்டில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்ஸும் இருந்தார். இவர் 1992 தமிழ்நாடு பேட்ச்சை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவரின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இவர் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவரும் இந்த ரேஸில் இருந்தார்.

ஆனால் இவர்கள் எல்லாம் ரேஸில் இருந்தாலும் சிவதாஸ் மீனாவைத்தான் முதல்வர் ஸ்டாலின் கடைசியில் தேர்வு செய்துள்ளார். தமிழ்நாட்டின் 49-வது தலைமைச் செயலராக, சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட உள்ளார். தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் இவருக்கு தலைமை செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.
ஜெயலலிதாவுடன் நெருக்கம்: தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் இவர் தற்போது தலைமை செயலாளர் பொறுப்பிற்கு தேர்வாகி உள்ளார். 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் அவருக்கு மாஸ்டார்மைண்டாக இருந்த 4 செயலாளர்களில் ஒருவராக இவர் இருந்தவர்.

அதன்பின் எடப்பாடி முதல்வரான போதும் இவரை அதேபோல் செயலாளர் பொறுப்பில் நியமிக்க நினைத்தார். ஆனால் அதற்குள் இவரை டெல்லி மத்திய அரசு பணிக்கு அழைத்தது. ஆனால் இவரை தமிழ்நாட்டிலேயே வைத்துக்கொள்ள எடப்பாடி தீவிரமாக முயன்று வந்தார். சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர் அனுப்பி வைப்பதாக கூட கூறி சில நாட்கள் கூடுதலாக தமிழ்நாட்டில் வைத்து இருந்தார்.
ஆனால் வேறு வழியின்றி சிவ்தாஸ் கடைசியில் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இடையில் பல முறை எடப்பாடி முயன்றும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு அழைக்க முடியவில்லை. இதையடுத்து ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு அழைத்து வந்து.. தற்போது தலைமை செயலாளரும் ஆக்கி உள்ளார். இவர் ஸ்டாலினின் குட் புக்கிலும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications