டென்ஷனாக்கும் சென்னை டிராபிக் ஜாம்! இனி ரிலாக்ஸ்! வேளச்சேரி - ஆலந்தூர் பறக்கும் ரயில் அப்டேட் இதோ!
சென்னை: சென்னையில் இனி போக்குவரத்து நெரிசல் குறைய போகிறது. வேளச்சேரியிலிரு்து ஆலந்தூர் பறக்கும் திட்டம் முடியும் தருவாயில் உள்ள நிலையில் விரைவில் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
சென்னையில் காலை 9 மணிக்குள்ளும் மாலை 6 மணிக்கு மேலும் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இதில் சிக்கும் வாகனங்கள் இஞ்ச் பை இஞ்ச்சாக நகரும். இதனால் ஒரு கிலோ மீட்டர் உள்ள தூரத்தை கூட சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்படும்.

இந்த போக்குவரத்து நெரிசலால்தான் பலருக்கு சென்னை என்றாலே அலர்ஜியாக இருக்கிறது. இதனால் 9 மணிக்கு ஆபிஸ் இருந்தாலும் சீக்கிரமாக கிளம்பிவிட நினைக்கிறார்கள். இன்னும் சிலர் ரயில், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகளில் பயணிக்கிறார்கள்.
இந்த ரயில் திட்டங்களுக்கு அருகே வசிப்போர், ரயில் நிலையங்களில் இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு ஆபிஸுக்கு ரயிலில் பயணிப்போருக்கு எளிதாக இருக்கும். உடல் அசதி இல்லாமல் எரிபொருளும் மிச்சமாகி ஹாயாக பயணம் செய்து ஆபிஸுக்கு ஃபிரஷ்ஷாக செல்லலாம். இதனால் பெரும்பாலானோர் ரயில் பயணங்களை விரும்புகிறார்கள்.
அந்த வகையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 495 கோடி செலவில் வேளச்சேரி- ஆலந்தூர் இடையே பறக்கும் ரயில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் 3 கட்டங்களாக போக்குவரத்து நெரிசலை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் கடற்கரை டூ மயிலாப்பூர் இடையே 9 கிமீ தூரத்திற்கு பறக்கும் ரயில் திட்டப்பணிகள் ரூ 266 கோடியில் 1997 இல் நடந்து முடிந்தன.

அது போல் 2ஆம் கட்டமாக மயிலாப்பூர்- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 877 கோடியில் 2007இல் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வேளச்சேரி- பரங்கிமலை இடையே 3ஆம் கட்ட பணிகள் தொடங்கி 495 கோடி ரூபாயில் 2008 இல் தொடங்கியது. வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை 5 கிலோமீட்டர் தொலைவுக்கான பணி 3 ஆண்டுகளில் 90 சதவீதம் வரை நிறைவடைந்துவிட்டது.
ஆனாலும் 13 ஆண்டுகளாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆதம்பாக்கம்- பரங்கிமலை இடையே 500 மீட்டர் தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினையே இந்த தொய்வுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்த நில எடுப்பு தொடர்பான வழக்குகளும் எப்போதோ முடிந்துவிட்டன.
ஆனாலும் இதை அதிமுக அரசு கிடப்பில் போட்டதாக கண்டனம் தெரிவித்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த திட்டத்தில் முக்கியமாக புறநகர் ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையம் என ஆலந்தூரில் மும்முனை ரயில்களும் இணையும் பகுதி நிறைவடையாமல் உள்ளது என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் இந்த திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு சட்ட போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி கட்ட இணைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. இந்த நிலையில் 495 கோடி ரூபாய் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ 730 கோடியாக உயர்ந்ததாக கூறி இந்த திட்டம் தொடர முடியாமல் கிடந்தது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரம்மாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 500 மீட்டர் அளவில் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணிகளும் முடிந்துவிட்டது. இதையடுத்து மீதமுள்ள பணிகளும் வரும் ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று ரயில் சேவையை விரைவில் தொடங்க ரயில்வே அதிகாரிகள் தீவிரமாக முயற்சித்து வருகிறார்கள். நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டம் தற்போது புத்துணர்ச்சி பெற்று செயல்பட தயாராகும் நிலையில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
-
வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை இன்று தொடங்காது! 17 ஆண்டு கால திட்டத்தில் மீண்டும் தடங்கல்! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications