லீஸூக்கு வீடு பார்க்குறீங்களா.. வீட்டை ஒத்திக்கு முடிக்கும்போது, "இதை" கவனிச்சீங்களா.. மறக்காம பாருங்க
சென்னை: வாடகைக்கு குடியிருப்போரைவிட, லீசுக்கு குடியிருப்போர்களுக்கு சற்று நிம்மதி உள்ளது.. அதேசமயம் சில விதிமுறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் சட்டம் உள்ளது.. சில உரிமைகளும் உள்ளது.. குறிப்பாக, ஒருவர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டை உரிமை கோரச்சட்டத்தில் வழிமுறை இல்லை.

ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர, சட்டத்தில் வழியிருக்கிறது. உரிமையாளர் நினைத்ததுமே, வீட்டு வாடகைதாரரை காலி செய்ய வைக்க முடியாது. பத்திரத்தில் கையெழுத்தானபடி, குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்த தவறும்போது வேண்டுமானால் காலி செய்ய சொல்லலாம்.
வாடகை சட்டம்: அதேபோல, வாடகை தேதி, உரிய நேரத்தை தள்ளி போனால், 10 நாட்கள் கூடுதலாக காத்திருக்கலாம்.. இல்லாவிட்டால், அந்த வீட்டை ஓனர் காலி செய்ய சொல்லலாம். வீட்டை அதிகமாக சேதப்படுத்தியிருந்தாலும் காலிசெய்ய சொல்லலாம். சட்டவிரோதமான செயல்களுக்காக வீட்டை பயன்படுத்தினாலும் காலி செய்ய சொல்லலாம்..
வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்கு தொல்லைதரும்படி நடந்து கொண்டாலும் வீட்டை காலி செய்ய சொல்லலாம். வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால் (மலைவாசஸ்தலங்களுக்கு இந்த விதிமுறை செல்லாது) காலி செய்யச் சொல்லலாம்.. இப்படி இன்னும் எத்தனையோ சட்டவிதிகள் உள்ளன.. அதேபோல லீசுக்கு அதாவது வீடு ஒத்திக்கும் சில வழிமுறைகள் உள்ளன.. முக்கியமாக சட்டரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்களும் உள்ளன.
நீட்டிக்கலாம்: மாதா மாதம் வாடகை கட்ட தேவையில்லை என்பதால், லீஸூக்கு இருப்பதில் லாபம் இருக்கவே செய்கிறது. எனினும், நாம் போடும் ஒப்பந்தத்திலேயே பாதி பிரச்சனை நீங்கிவிடும்.. எப்போதுமே, 11 மாதங்கள் என்ற அளவில் தான் லீஸ் ஒப்பந்தம் போடப்படும். ஒருவேளை 11 மாதங்கள் முடிவடைந்துவிட்டால், அதே வீட்டில் குடியிருக்க இரு தரப்பினருமே விரும்பினால், ஒப்பந்தத்தை மேலும் 11 மாதத்திற்கு நீட்டித்துக்கொள்ளலாம்...
அப்படி நீட்டிக்கும்போது, ஒருசில ஓனர்கள் லீஸ் தொகையை அதிகமாக கேட்பார்கள். எனவே, குடியிருப்பவர்கள் அதை விரும்பினால், அதே வீட்டில் இருக்கலாம். இல்லாவிட்டால், லீஸ் தொகையை முழுதாக திரும்பப் பெற்றுக்கொண்டு வேறு வீட்டை லீசுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல, லீஸ் ஒப்பந்தம் போடும்போதே, வீட்டுக்கு ஒயிட்வாஷ் செய்வது யார் என்பதில் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.. வீட்டுக்கு வெள்ளையடிப்பது வாடகைதாரர் என்றால், அதையும் பத்திரத்திலேயே குறித்து கொள்ள வேண்டும்..

குடியிருப்பவர்கள்: லீசுக்கு குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய சொல்ல முடியாது.. கிட்டத்தட்ட 3 மாதங்கள் வரை அவகாசம் தந்துவிட்டு, அதற்கு பிறகே காலி செய்ய சொல்லலாம். அதேபோல், வீட்டை லீஸ் எடுத்தவருக்குப் பணம் தேவைப்படும் பட்சத்தில், பணத்தைத் திருப்பித் தர, வீட்டின் ஓனருக்கும் 3 மாதங்கள் அவகாசம் தர வேண்டும்..
ஒருவேளை வீட்டு உரிமையாளர், தான் பெற்ற ஒத்தித்தொகையை திருப்பியளிக்க மறுத்தால், அவர்மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுத்து, சட்டரீதியாக பணத்தை மீட்கலாம்..
வழக்கறிஞர்கள்: எனினும், லீசுக்கு வீடு எடுப்பதற்கு முன்பு, ஒரு சட்ட ஆலோசகரின் மூலமாக அந்த வீட்டின் உரிமை ஆவணங்களை (Title Deeds) முழுவதும் வாங்கி சரிபார்த்து, அந்த வீட்டை ஒத்திக்கு விடும் நபர் சரியானவர்தானா என்பதை தெரிந்து கொள்ளுதல் முக்கியம்.. வேண்டுமானால், வழக்கறிஞரின் ஆலோசனை பெற்றபிறகு ஒத்திக்குச்செல்வது இன்னும் சிறப்பான செயலாக இருக்கும் என்கிறார்கள்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications