பத்திரப்பதிவு முதல் பழனி முருகன் கோயில் வரை.. நாளை அமலாகும் புதிய சட்டங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அக்டோபர் 1ஆம் தேதி அமலுக்கு வரும் திட்டங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

- அக்டோபர் 7ஆம் தேதி முதல் ரூ 2 ஆயிரம் நோட்டுகள் செல்லாது
- நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்யும் போது சொத்துக்களின் புகைப்படமும் இடம் பெறுவது கட்டாயம்
- வெளிநாடு செல்பவர்கள் ரூ 7 லட்சத்திற்கு மேல் கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செலவு செய்தால் 20 சதவீதம் வரி.
- வெளிநாட்டு கல்விக்காக ரூ 7 லட்சத்திற்கு மேல் கடன் பெற்றால் 0.5 சவீதம் டிசிஎஸ் கட்டணம்
- மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் நாமினியை சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும்.
- டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளிலும் நாமினி கட்டாயம்.
- பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும்.
- பழனி முருகன் கோயிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை
- அரசு வேலைவாய்ப்புகளுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம்.
- மக்கள்தொகை, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், சொத்துப்பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு ஆகியவற்றிற்கு ஒரே ஆவணமாக பிறப்ப சான்றிதழை பயன்படுத்தலாம்.
- பிறப்பு, இறப்புகளை கட்டாயம் பதிவு செய்வது அவசியம்
- அக்டோபர் 1 முதல் குடிநீர் வரி ரொக்கமாக ஏற்கப்படாது; சென்னை குடிநீர் வாரியம்
- இன்று முதல் ஆன்லைன் கேமிங்கிற்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி
- மணிப்பூரில் இன்று முதல் ஆயுதப்படை சிறப்பு சட்டம் அமல்
- இன்று முதல் 182 ரயில்கள் நேரம் மாற்றம்
- சிமெண்ட் விலை இன்று முதல் உயர்வு












Click it and Unblock the Notifications