Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலைக்காக செந்தில் பாலாஜியிடம் யாராவது பணம் கொடுத்தார்களா? சாட்சி இருக்கா? பரபரத்த கபில் சிபல் வாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜியால் அரை மணி நேரம் நிற்கவே முடியவில்லை. அவர் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார் என கடந்த 15 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி கடந்த 15 ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் அதன் மீதான தீர்ப்பு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் அன்றைய தினம் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் எந்த மாதிரியான வாதங்களை முன்வைத்தார் என்பதை பார்ப்போம்.

 Do you know what did Kapil Sibal made argument on Senthil Balaji case?

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம்: செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பணபரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது. சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளேன். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்?. வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பணபரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சிகளும் கூறவில்லை. வேலைக்காக பணம் கொடுத்தாக கூறும் யாரும் நேரடியாக செந்தில் பாலாஜியிடம் கொடுக்கவில்லை. அவரின் உதவியாளர்கள் என கூறப்படும் கார்த்திகேயன், சண்முகம் என்ற இருவரிடம் தான் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சாட்சியாக கூட சேர்க்கப்படவில்லை. செந்தில் பாலாஜி மீது கோபி, பிரபு ஆகிய இருவர் புகாரளித்தனர். அதில் ஒருவர் சாட்சியாக சேர்க்கப்படவில்லை. மற்றொருவர் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மற்ற யாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்க கூடவில்லை. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. ஒருவர் மீது வழக்குப்பதிவு செயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா? இல்லையா என்பதை விசாரணை அமைப்பு தான் நிரூபிக்க வேண்டும்.

வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தற்போது அமலாக்கத் துறையிடம் உள்ள நிலையில் அவரால் சாட்சிகளை கலைக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் நிலையில் எங்கும் தப்பி செல்ல இயலாது. செந்தில் பாலாஜிக்கு தற்போது இருக்கும் உடல் நிலை படி 30 நிமிடங்களுக்கு மேல் அவரால் நிற்க முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் செந்தில் பாலாஜி விசாரணையை எதிர் கொள்வார். 3,000, 20,000 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டுள்ளதால் கலைக்க முடியாது என வாதிட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி சார்பில் மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முன் வைத்த வாதம்: செந்தில் பாலாஜி மீது கூறப்படும் முறைகேடு அவர் அதிமுகவில் இருந்த போது நடைபெற்றது. ஆனால் அவர் திமுகவில் சேர்ந்த பிறகே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களை 6 நாட்கள் சட்ட விரோதமாக அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

செந்தில் பாலாஜி குற்றம் செய்தாரா? இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும். செந்தில் பாலாஜி எங்கும் தப்பி செல்லமாட்டார். வேண்டுமென்றால் அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கிறோம். இவ்வாறு என்.ஆர். இளங்கோ வாதம் செய்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+