Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிடுக்கிப்படி போட்ட அமலாக்கத் துறை.. கோபமாக செந்தில் பாலாஜி கோர்த்துவிட்டது யாரை தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்ட கேள்விகளுக்கு ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர் இதெல்லாம் யாருக்கு தெரியும் எனபதையும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை நீதிமன்ற உத்தரவின்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்தனர். அந்த வகையில் அவரை கடந்த 7ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Do you know what did Senthil Balaji gives reply to ED questions

செந்தில் பாலாஜியிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் 400 கேள்விகளை அமலாக்கத் துறையினர் தயார் செய்து வைத்திருந்தனராம். நாளொன்றுக்கு 50 கேள்விகளை கேட்க திட்டமிட்டிருந்தனர்.

அந்த வகையில் செந்தில் பாலாஜியிடம் தினந்தோறும் 9 மணி நேரம் முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் தம்பி அசோக்குமார் கரூரில் கட்டி வரும் சொகுசு பங்களா குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினராம். மேலும் அந்த பங்களாவில் உங்களுக்கு ஏதேனும் சம்பந்தமிருக்கிறதா என கேட்டனராம். அதறகு செந்தில் பாலாஜி இல்லை என பதிலளித்தாராம்.

செந்தில் பாலாஜி பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, அப்படியா எனக்கு நினைவில்லை என்றே தெரிவித்து வருகிறாராம். அது போல்தான் தம்பியின் வீடு குறித்த கேள்விக்கு அவர் வீட்டை எப்படி கட்டி வருகிறார் என்பது குறித்து என்னிடம் தம்பி கூறியதாக நினைவே இல்லை என கூறிவிட்டாராம். செந்தில் பாலாஜியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Do you know what did Senthil Balaji gives reply to ED questions

சில கேள்விகளுக்கு இது உங்களுடையதா என கேட்டதற்கு இல்லை என கூறியுள்ளார். அதே சமயம் அதிகாரிகள் அப்போ இது உங்கள் தம்பியுடையதா என கேட்ட போது என்னுடையது இல்லை அவ்வளவுதான் என கூறினாராம். அமலாக்கத் துறையினர் எதிர்பார்த்த கேள்விகளுக்கு செந்தில் பாலாஜியிடம் இருந்து பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவருடைய கஸ்டடி நீட்டிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பண மோசடி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பணம் வேறு எந்த நிறுவனத்திலாவது முதலீடு செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு எனது தம்பிக்குத்தான் தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+