கிடுக்கிப்படி போட்ட அமலாக்கத் துறை.. கோபமாக செந்தில் பாலாஜி கோர்த்துவிட்டது யாரை தெரியுமா?
சென்னை: செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்ட கேள்விகளுக்கு ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர் இதெல்லாம் யாருக்கு தெரியும் எனபதையும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை நீதிமன்ற உத்தரவின்படி அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாட்கள் காவலில் எடுத்தனர். அந்த வகையில் அவரை கடந்த 7ஆம் தேதி இரவு முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செந்தில் பாலாஜியிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் 400 கேள்விகளை அமலாக்கத் துறையினர் தயார் செய்து வைத்திருந்தனராம். நாளொன்றுக்கு 50 கேள்விகளை கேட்க திட்டமிட்டிருந்தனர்.
அந்த வகையில் செந்தில் பாலாஜியிடம் தினந்தோறும் 9 மணி நேரம் முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரிடம் தம்பி அசோக்குமார் கரூரில் கட்டி வரும் சொகுசு பங்களா குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினராம். மேலும் அந்த பங்களாவில் உங்களுக்கு ஏதேனும் சம்பந்தமிருக்கிறதா என கேட்டனராம். அதறகு செந்தில் பாலாஜி இல்லை என பதிலளித்தாராம்.
செந்தில் பாலாஜி பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது, அப்படியா எனக்கு நினைவில்லை என்றே தெரிவித்து வருகிறாராம். அது போல்தான் தம்பியின் வீடு குறித்த கேள்விக்கு அவர் வீட்டை எப்படி கட்டி வருகிறார் என்பது குறித்து என்னிடம் தம்பி கூறியதாக நினைவே இல்லை என கூறிவிட்டாராம். செந்தில் பாலாஜியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சில கேள்விகளுக்கு இது உங்களுடையதா என கேட்டதற்கு இல்லை என கூறியுள்ளார். அதே சமயம் அதிகாரிகள் அப்போ இது உங்கள் தம்பியுடையதா என கேட்ட போது என்னுடையது இல்லை அவ்வளவுதான் என கூறினாராம். அமலாக்கத் துறையினர் எதிர்பார்த்த கேள்விகளுக்கு செந்தில் பாலாஜியிடம் இருந்து பதில்கள் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அவருடைய கஸ்டடி நீட்டிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பண மோசடி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பணம் வேறு எந்த நிறுவனத்திலாவது முதலீடு செய்யப்பட்டதா என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும்பாலான கேள்விகளுக்கு எனது தம்பிக்குத்தான் தெரியும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications