சென்னை அண்ணா மேம்பாலம் அருகே.. குடிப்போதையில் பெண்ணை தாக்கிய பணக்கார விஐபி? நடந்தது என்ன?
சென்னை: அண்ணா மேம்பாலம் அருகே கார் விபத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், அம்மா மற்றும் மகன் நடுரோட்டில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அபிலேஷ் குமார் முத்துராமன் என்ற நபர் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் அண்ணா (ஜெமினி) மேம்பாலம் அருகே காரை தவறான பக்கம் இயக்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அம்மா மற்றும் மகனை, மற்றொரு காரில் வந்த ஒரு பணக்கார விஐபி மற்றும் அவரது மகன் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. அந்த பணக்கார விஐபி குடிபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக பணக்கார விஐபி தன்னை தாக்கிய கூறி அபிலேஷ் குமார் முத்துராமன் வெளியிட்ட பதிவில், நேற்று (மே 22ம் தேதி) இரவு 9 மணியளவில் அண்ணா மேம்பாலத்தின் கீழ் (ஜெமினி) சாலை விபத்து சம்பவத்து சம்பவத்தின் போது நானும் அம்மாவும் தாக்கப்பட்டோம். எங்கள் இருவரையும் நடுரோட்டில் அறைந்தனர். பணக்காரராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தால்.. சாலையில் ஒரு பெண்ணை அடிக்கலாமா?
அன்று என்ன நடந்து என்றால், அண்ணா சாலையில் எங்கள் காரை இடித்து விட்டு இறங்கிய உடன், என் காரை அவர்கள் நெருங்கி வருவதை கவனித்தேன். அதில் அப்பா, மகன் இருந்தனர். இருவருமே என் அருகில் வந்து என் கையை பிடித்துக்கொண்டு சரமாரியாக அடித்தார்கள். காரை ஒட்டிவந்த அந்த பணக்காரரின் அப்பா குடித்திருந்தார்.
நான் அவர்களை எதிர்கொள்ள பக்கத்தில் நின்றேன், அவர் என் காரை நெருங்கி வருவதை கவனித்தேன். அவர் கோபமாகத் தொடங்கினார், நான் காரை விட்டு இறங்கினேன், அவர் எனக்கு மிக அருகில் வரத் தொடங்கினார். அவனது குடித்த அப்பாவும் எங்கள் காரை நோக்கி வந்தார், வந்தவுடனே இருவரும் கைநீட்டி என்னை அறைந்தார்கள். நான் அவர்களை திருப்பி அடிக்கவில்லை.. ஆனால் குடிந்திருந்த அந்த பணக்காரர் என் அம்மாவை அறைந்தார்.
அந்த நேரம் பொதுமக்கள் ஓடிவந்து காவல்துறையை அழைத்தனர். இந்த நேரத்தில், உடனே அவர்கள் தப்பிக்க முயன்றனர், ஆனால் நாங்கள் அவர்களை அங்கேயே மடக்கி பிடித்தோம். காவல்துறை சரியாக அங்கு வந்துவிட்டது. ஆனால் அந்த பணக்கார நபர் உடனே போனில் யாரையோ அழைத்து பேசுங்கள் என்று அவர்களிடம் கொடுக்க முயன்றார்.
அவர் பலமுறை இதைச் செய்தார். போனில் இருந்த இந்த செல்வாக்கு மிக்கவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது. நல்லவேளையாக, ஒரு வக்கீலை அனுப்பிய வழக்கறிஞர் நண்பரை அழைத்தோம். அவர் காவல்துறையிடம் பேசினார். ஆனால் போலீசார் உடனடியாக வழக்கை எடுப்பதைத் தவிர்க்க முயன்றனர். நாளை வாருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அப்போது அந்த பணக்கார நபர் என்னிடம் பேசுவதற்கு நீ யார்? எம்பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என அனைவரையும் எனக்கு தெரியும் என்று மிரட்டினார்.
அந்த பணக்காரருக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எதிர்க்கட்சியின் முத்திரையுடன் வந்த காரில் இருந்து ஒருவர் வெளியே வந்தார். அப்போது கூட்டம் அங்கு கூடிவிட்டது. ஊடகவியலாளர்களும் வந்துவிட்டனர். போலீசில் புகார் கடிதம் கொடுத்தோம். அப்போதும் போலீசார் அவர்களை காப்பாற்ற முயற்சித்தார்கள்.

அவர்கள் எனக்கு ப்ரீதலைசர் சோதனையை மேற்கொண்டார்கள், அதற்கு நான் இணங்கியதுடன் ஊதவும் செய்தேன். ஆனால் போலீசார் அந்த பணக்காருகு ப்ரீதலைசர் பரிசோதனையைத் தவிர்க்க முயன்றனர். அதற்கு சோதனையில் இருந்து பணக்காரின் மகன் தப்பிவிட்டார். இறுதியாக, கேமராக்கள் முன்னிலையில் அனைவரும் வலியுறுத்தினார்கள். ஒரு வழியாக ஊதினார். சோதனை முடிந்தது, அவர் மிகவும் குடிபோதையில் இருந்தார் (மீட்டரில் 114 என காட்டியது, அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை). நாங்கள் எங்கள் காரை ஸ்டேஷனில் விட்டுவிட்டு வீட்டிற்கு வர வேண்டிய நிலை இருந்தது.
சென்னை நகரத்தின் மிகவும் பிரபலமான அண்ணா சாலையில் பெண்ணை தாக்கியுள்ளனர். ஒருவேளை, நாங்கள் மவுண்ட் ரோட்டின் மறுமுனையிலோ அல்லது லூப் ரோட்டில் இருந்தாலோ, அந்த இரண்டு பேரும் அவ்வளவு எளிதில் சிக்கியிருக்க மாட்டார்கள்" இவ்வாறு அபிலேஷ் குமார் முத்துராமன் தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications