எனக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இது தான்! முதல்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்க அறிவிப்பு!
சென்னை: தனக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலே நிதி நெருக்கடி தான் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
உங்களில் ஒருவன் கேள்வி பதில் மூலம் அரசின் நிதி நிலவரம் பற்றி மக்கள் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
மேலும், தனது சாதனை என்றால் அது மக்களின் முகங்களில் காணும் சிரிப்பு தான் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

உங்களில் ஒருவன்
திராவிடவியல் கோட்பாடுகள், திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் "உங்களில் ஒருவன் பதில்கள்" என்ற நிகழ்வு மூலம் பதிலளித்து வருகிறார். இந்நிலையில் முதல் கேள்வி பதில் நிகழ்சியில், ''ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில் எவையெவை சாதனைகளாக இருக்கின்றன? எவையெவை சவால்களாக இருக்கின்றன?'' என்ற கேள்வி அவருக்கு முன் வைக்கப்பட்டது.

ஸ்டாலின் பதில்
அதற்கு அவர் அளித்த பதிலின் விவரம் வருமாறு; ''மக்கள் முகங்களில் நான் காணக்கூடிய சிரிப்புதான் என்னுடைய சாதனை! நிதி நெருக்கடிதான் இன்னும் இருக்கிற சவால்!''. தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக இதுவரை ஊடகங்களில் மட்டுமே கூறப்பட்டு வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும் அதை ஒப்புக்கொள்ளும் வகையில் இதனைத் தெரிவித்திருக்கிறார். இந்த நிதி நெருக்கடி காரணமாக தான் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க முடியவில்லை என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

பழனிவேல் தியாகராஜன்
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் திட்டங்கள் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து அது குறித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓராண்டுக்குள் நிதி நெருக்கடியிலிருந்து தமிழக அரசு மீண்டெழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு விலக்கு
இதனிடையே உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் ''நீட் தேர்வுல இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?'' என்ற கேள்வியும் முதல்வர் ஸ்டாலினுக்கு முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலின் விவரம் வருமாறு; ''முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீர்கள்.நீட் தேர்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக்கொண்டு இருக்கிறது பா.ஜ.க. வரும் நாடாளுமன்றத் தேர்தல் அதற்குப் பாடம் புகட்டுவதாக இருக்கும்.''
-
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications