Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி அட்டைதாரர்களுக்கு மீண்டும் குட்நியூஸ்.. இந்த தேதியில் ரேஷன்தாரர்கள் ரெடியா இருங்க: தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காக பல்வேறு அறிவிப்புகளையும், நிறைய சலுகைகளையும் தமிழக அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், தற்போதும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, ரேஷன்தாரர்களுக்கு, அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.. குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை மாதமாதம் வழங்கப்பட்டு வருகின்றன..

Do you know when will Tamil Nadu Government conduct Ration Card Grievance Camp and Ration Card Holders are happy

இந்த சலுகை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பலன்களை பெற்று வருகின்றனர். தமிழக அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டும் வருகின்றன..

தமிழக அரசு: இதனிடையே, பண்டிகை காலங்களில் தீபாவளி, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும், இந்த ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகின்றன.. தற்போதும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.. இதைத்தவிர, இயற்கை சீற்றங்களினால் பாதிப்படைந்தோருக்கும் நிதி நிவாரண உதவிகளும், இதே ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோல, ரேஷன் கடைகளில் திடீர் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு ஏதாவது புகார் இருந்தால், அதை தெரிவிக்க இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.. மேலும், ரேஷன்தாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் தமிழகமெங்கும் நடத்தி வருகிறது.

குறைகள்: இந்த முகாம்களில், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டுகளை அப்டேட் செய்திருக்க வேண்டியதும் அவசியமாகும். சமீப நாட்களாகவே, ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளை அப்டேட் செய்யாமல் வைத்திருந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தடுக்கப்பட்டது.. இந்நிலையில்தான், மீண்டும் முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மீண்டும் முகாம்: அந்த அறிவிப்பில், "ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் வரும் ஜனவரி 20ம் தேதி குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் மொபைல் எண் அப்டேட், பயோமெட்ரிக் அப்டேட் போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

இது மட்டுமல்லாமல், இந்த முகாமின் மூலமாக பொதுமக்கள் ரேஷன் பொருட்கள், ரேஷன் கடை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் புகார் அளிக்கலாம். எனவே, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும்"என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+