தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தெரியுமா?
சென்னை: தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சென்னை, திருவள்ளூர், காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னையை சுற்றி நேற்று இரவு முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று இரவு முழுவதும் இடைவிடமால் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று கனமழைக்கு நடுவில் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் குடைகளை பிடித்துக்கொண்டு பள்ளிக்கு சென்றார்கள். இந்நிலையில் நாளை சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.. அதேநேரம் சென்னை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
அதேநேரம் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், காரைக்கால், புதுச்சேரி மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் நாளை (நவ.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை ஒட்டி உள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இரவு 11 மணி வரை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் மிக கனமழை கொட்டி தீர்ப்பதால் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நாளை காலை தான் இதுகுறித்து நிலவரம் தெரியவரும். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை (நவ.15) விடுமுறையா என்பதும் நாளை காலை தான் தெரியவரும்..
மேலும் கனமழை பெய்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு நவம்பர் 15ம் தேதி விடுமுறையா என்பது நாளை தான் தெரியவரும். சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை காலை 8-30 மணி வரை மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலார்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், விடிய விடிய இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications