ஆனந்த் அம்பானி- ராதிகா நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து வந்தது யார் ? அம்பானி வீட்டு அதிர்ஷ்டசாலியாமே
சென்னை: ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட்டின் நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து வந்து கொடுத்தது யார் தெரியுமா?
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் என்கோர் நிறுவன தொழிலதிபரின் மகள் ராதிகா மெர்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது அவர்களது நிச்சயதார்த்த மோதிரத்தை யார் கொண்டு வந்தது தெரியுமா?

அந்த நபர் அம்பானி குடும்பத்தில் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார். ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த மோதிரத்தை எடுத்து வரும் நபரை ஆனந்தின் சகோதரி ஈஷா அம்பானி அறிமுகப்படுத்துகிறார்.
இதையடுத்து அவருடைய செல்ல வளர்ப்பு நாய் அந்த மோதிரத்தை கொண்டு வருகிறது. அந்த நாயின் கழுத்தில் சிவப்பு நிறத்தில் துணி கட்டப்பட்டுள்ளது. அந்த நாய் மேடைக்கு வந்ததுமே அந்த துணியில் இருந்த மோதிரத்தை ஆனந்த் அம்பானி எடுத்து ராதிகாவின் விரலில் போட்டு விடுகிறார்.
அது போல் ராதிகாவும் ஆனந்த் கை விரலில் போட்டு விடுகிறார். இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி, நீடா அம்பானி உள்ளிட்டோர் நடனமாடுகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனந்துக்கும் ராதிகாவுக்கும் இடையே வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை அவர்களது ப்ரீ வெட்டிங் நடக்கிறது.
இந்த நிலையில்தான் ஆனந்த் அம்பானி ஒரு விலங்குகள் நல ஆர்வலர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் சிஎன்என் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஆனந்த் கூறியிருப்பதாவது: சிறு வயது முதலே எங்களை என் அம்மா, அப்பா காடுகளுக்குத்தான் சுற்றுலா அழைத்து செல்வார்கள்.
அழியும் தருவாயில் இருந்த 50 முதல் 60 வகையான உயிரினங்கள் எங்கள் மறுவாழ்வு மையம் மூலம் மீட்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் விலங்குகளுக்கான பிரத்யேக பல்கலைக்கழகம் ஒன்றையும் உருவாக்க உள்ளதாகவும் மாணவர்கள் பயிற்று பெற்றுக் கொள்ளலாம். வன விலங்குகளுக்கான மையங்களும் மறுவாழ்வு மையங்களும் குறைவாகவே உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில் சுமார் 2500 ஏக்கர் நிலத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பராமரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் முன்னெடுப்பில் உருவாகி வருகிறது. இங்கு 200 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications