கிட்டப் போ கிட்டப் போ.. ஆஹா.. இதை தயவு செஞ்சு நாய்ன்னு சொல்லாதீங்க.. இதைப் பார்த்து திருந்துங்க
Recommended Video
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் செல்ல பிராணியான நாயை அழைத்து சென்ற ஒருவர் அதற்கு ஹெல்மெட் அணிவித்து அழைத்து சென்றது வைரலாகி வருகிறது.
தலைக்கவசம் உயிர் கவசம் என அரசு கூறி வருகிறது. அதனால் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும் கட்டாயத்தையும் ஏற்படுத்தி வருகிறது. எனினும் இதை பெரும்பாலானோர் கேட்பதில்லை.
|
விழிப்புணர்வு
ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு விழா கொண்டாடப்பட்டு அதில் பாதுகாப்பின் அவசியம் குறித்து சொல்லப்படுகிறது. நடித்து காட்டுவதன் மூலமும் மற்ற விபத்துகளை சுட்டிக் காட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஹெல்மெட்
எனினும் யாரும் விதிகளை மதிப்பதில்லை. அபராதம் விதித்தும் பார்த்தாச்சு, அன்பாக சொல்லியும் பார்த்தாச்சு. கேட்டால்தானே!. பின் சீட்டில் அமர்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

விருகம்பாக்கம்
ஆனால் முன்சீட்டில் அமர்ந்திருப்பவர்களே ஹெல்மெட் அணியாத போது பின்சீட்டில் இருப்பவர்கள் மட்டும் எப்படி அணிவர்? ஆனால் சென்னையில் விருகம்பாக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்கிறார்.

வைரல்
அவருக்கு பின்னால் ஒரு கருப்பு நிற நாய் அமர்ந்துள்ளது. அதுவும் ஹெல்மெட் அணிந்து கொண்டு முன்னால் இருப்பவரை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications