கண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்.. வதந்திகளை நம்பாதீங்க.. டாஸ்மாக் திட்டவட்ட அறிவிப்பு!
சென்னை: நாளை முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என்று வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 24ம் தேதியுடன் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 24ம் தேதி மாலை 6மணி உடன் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. அன்று 6 மணி நேரமே மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த 6 மணி நேரத்தில் மட்டும் 211 கோடிக்கு மது விற்பனையானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் அடைப்பால் குடிக்க முடியாமல் புலம்பி வருகிறார்கள். கேரளாவில் உச்சகட்டமாக மது அருந்த முடியாததால் 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மீண்டும் கடை திறக்க அரசு உத்தரவிடாதா என்று பேராவலில் உள்ளார்கள்.
வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் அவர்கள் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில பரவிய தகவலால் உற்சாசம் அடைந்தனர். அந்த வாட்ஸ் ஆப் தகவலில் நாளை முதல் தினமும் 2 மணி நேரம் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இது முற்றிலும் வதந்தி என டாஸ்மாக் நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் 2மணி நேரம் செயல்படும் என சமூக வலைதளங்களில் வெளியான செய்தி வதந்தியே. இது போன்ற எந்த அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை ஏற்கனவே அரசு அறிவித்தபடி ஏப்ரல் 14ம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளை திறப்பது குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications