Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அதுவரை தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்” - சட்டசபையை அதிரவிட்ட தங்கம் தென்னரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: “மகளிர் உரிமைத்தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழ்நாடு உரத்துக் குரல் கொடுக்கும். அந்தக் கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்” என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் உரையாற்றியுள்ளார்.

தமிழக சட்டசபையில் கடந்த 17 ஆம் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

Don t Touch Magalir Urimai Thogai TN Will Face Turmoil Warns Thangam Thennarasu

இந்த நிலையில், சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றினார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, நிதி அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் யாரும் அவைக்கு வரவில்லை.

அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை ஆற்றிப் பேசுகையில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற பல தடைகள், சோதனைகள் வந்தன. இந்த ஆட்சி பதவியேற்ற உடன் முறையாக பயிற்சி பெற்ற 23 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு நலத் திட்டங்கள், மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடைக்கோடி மக்களின் நலன் காக்கும் ஆட்சியாக உள்ளது திராவிட மாடல் ஆட்சி. சமூக நீதிக்காக நமது திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடர்ந்து போராடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பேருந்து தான். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரத்தை அளிக்கும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சமூகநீதிக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து போராடும். மகளிர் உரிமைத்தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். சமூக நீதிக்கு பங்கம் வரும்போது எல்லாம் தமிழ்நாடு உரத்துக் குரல் கொடுக்கும். கொந்தளிப்பு உணர்வு இருக்கும்வரை தமிழ்நாட்டை ஆள்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்” என உரையாற்றி உள்ளார்.

தங்கம் தென்னரசு மேலும் பேசுகையில், "தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சவால்களையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு தொடர்ந்து சமூகநீதிப் பயணத்தை நிகழ்த்தி வருபவர் நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். சமூகநீதிக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து போராடும். தமிழ்நாட்டில் கலகம் விளைவிக்க முயற்சி செய்த சக்திகள் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாடு அமைதி பூங்காவாக விளங்கி வருகிறது.

நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுக் கருத்துகள் கொண்ட எதிர்க்கட்சிகள் இருக்கிறது. ஆனால், எதிரிகளே கிடையாது. கூட்டாட்சி தத்துவத்தை குலைத்திடும் எந்த முயற்சிகள் தலைநகரில் இருந்து உருவானாலும், அதை எதிர்க்கும் முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்துதான் ஒலிக்கும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து வந்தவர்கள் குடியிருக்கும் பகுதிகள் 'அகதிகள்' என்றுதான் அழைக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அந்த சொல்லை மாற்றி, 'இலங்கைத் தமிழர்கள்' என்று தாய்த்தமிழ் உறவை உறுதிசெய்து, அங்கீகாரம் வழங்கியிருக்கிறார் நம் முதலமைச்சர்.

தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் பயணித்திட, உலகத் தமிழர்களை வழிநடத்திட முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமை காலத்தின் கட்டாயமாக உள்ளது. நல்ல திட்டங்களை செயல்படுத்தினால் போதும். மற்ற மாநிலங்களை விட முன்னிலையில் இருக்கலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கரங்களை பற்றி நாம் அனைவரும் ஒன்றாக வென்றிடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+