Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இ பான் கார்டு.. உங்களுக்கு இப்படி இ-மெயில் வந்திருக்கா பாருங்க? டச் பண்ணாதீங்க.. பறந்து வந்த அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெருகிவரும் ஆன்லைன் மோசடிகளுக்கு யாருமே ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.. ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக பலமுறை, பல்வேறு அறிவுறுத்தல்களையும் ஒன்றை பொதுமக்களுக்காக விடுத்தபடி உள்ளனர்.. எனினும், புதுப்புது மோசடிகள் அரங்கேறிவருவதால், மீண்டும் ஒரு எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.

அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏராளமான மோசடிகள் தற்போது அரங்கேறி வருகின்றன.. குறிப்பாக, பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.

e-PAN Card PIB Fact Check email

விதவிதமான மோசடிகள்

அதேபோல, "கூரியர் தபாலில் உங்கள் பெயரில் போதை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் உங்களை கைது செய்து ஜெயிலில் அடைத்து விடுவோம்" என்று மிரட்டி ஐடி ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பதும் தொடர்கதையாகிவிட்டது..

அதேபோல, உங்களது ATM கார்டு காலாவதியாக போகிறது, மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம், உடனே தடுத்துநிறுத்த, குறிப்பிட்ட நம்பருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் பொய்களை சொல்லி, பீதியை கிளப்பியும் ஆன்லைன் மோசடிகள் நடக்கின்றன..

கூகுள் பே, கியூஆர் கோடு

அதேபோல, கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாகவும் மோசடி நடக்கிறது.. "உங்க அக்கவுண்டிற்கு தெரியாமல் பணம் அனுப்பிட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொல்லி, கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடக்கிறது.. கியூஆர் கோடை அனுப்பும்போது, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை மர்மநபர்கள் சுருட்டி விடுகிறார்களாம்.

எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க, அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விட வேண்டும் என்றும், தொடர்ந்து நீங்கள் மர்மநபர்களிடம் பேசினால், அதை பயன்படுத்தியே வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள் என்றும் போலீசார் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.

கடிவாளங்கள்

அதுமட்டுமல்ல, ஒருசிலர், தாங்கள் செய்வது குற்றம் என்று தெரிந்தும், மோசடி பேர்வழிகளுக்கு தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை தந்து, கமிஷனை பெற்றுக் கொள்கிறார்களாம்.. எனவே, மோசடிக்கு உடந்தையாக, தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை யார் கொடுத்தாலும், அதுவும் குற்றமாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று ஏற்கனவே சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

இவ்வளவு கடிவாளங்களை போலீசார் போட்டும்கூட, மீண்டும் நூதன மோசடிகள் பெருகி வருகின்றன.. இந்நிலையில், பான் கார்டுகளை வைத்தும் மோசடி நடக்கிறதாம்..

மீண்டும் வந்த எச்சரிக்கை

இன்றைய சூழலில் பான் கார்டுகள் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது... எனவே, இந்த அவசியத்தை புரிந்து, மர்மநபர்கள், இதிலும் தங்களது மோசடிகளை காட்ட துவங்கிவிட்டார்கள்.. எனவேதான், PIB Fact Check எனப்படும் உண்மை சரிபார்ப்பு பிரிவிலிருந்து, பொதுமக்களுக்கு, எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

அதில், Download e-PAN Card என்று உங்களுக்கு இ-மெயில் வந்தால் அதனை நம்ப வேண்டாம்.. இதுபோன்ற எந்த ஒரு இ-மெயிலும் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்படவில்லை.. எனவே இப்படியான மெயில் வந்தால் அதில் உள்ள எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். இதனால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும், அக்கவுண்டில் உள்ள பணம் திருடப்பட வாய்ப்பு உள்ளது என்று PIB Fact Check எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+