உதட்டுக்கும் தாடைக்கும் இடையே அதக்கி வைக்கும் இனிப்பு புகையிலை தலையணை! டாக்டர் பரூக் வார்னிங்
சென்னை: இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் கூடிய புகையிலையை மாணவர்கள் பயன்படுத்தும் தலையணை போன்ற பைகளை பயன்படுத்த தொடங்கினால் அடுத்து சிகரெட், பீடா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்பதால் இதுகுறித்து பள்ளி மாணவர்களளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இது தான் கூல் லிப். இதில் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் புகையிலை" தலையணை போல பைகளில் கிடைக்கிறது.
உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும். ஒரு சின்ன ஹை கிடைக்கிறது.

வஸ்து
இந்த போதை வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது . புகையிலை = நிகோடின், இது ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை இதே புகையிலை இருக்கும் சிகரெட் / பீடா/ கணேஷ் போன்ற வேறு பல போதை வஸ்துக்களுக்கும் பழக்கம் உண்டாக்கி விடக்கூடும்.

தமிழகம்
தமிழ்நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனம் மூன்று மாவட்டங்களில் நடத்திய கள ஆய்வில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளிடையே 3021 பேரிடம் ஆய்வு செய்ததில் 23% பேர் இந்த தலைகாணியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டில் கல்வி பயில செல்லும் பிள்ளைகள்
நம் வீட்டில் கல்வி பயிலச் செல்லும் செல்வங்களின் புத்தகப்பைகளில் கால்சட்டை கை சட்டைகளின் பைகளில் இது போன்ற விசயங்கள் கிடைத்தால் இது வரை தாங்கள் சாக்லெட் என்று நினைத்திருக்கக் கூடும். இனி இவற்றைப் பார்த்தால் கட்டாயம் நம் செல்வங்களுக்கு அன்பான அனுசரணையான கவுன்சிலிங் தேவை. கண்டிப்பாக அடி உதை உதவாது.

ஒவ்வாமை
அது நம் மீது ஒவ்வாமையை மட்டுமே உருவாக்கும். உங்களின் குடும்ப நல மருத்துவரிடம்/ குழந்தைகள் நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஒரு சின்ன ஹெல்த் கவுன்சிலிங் கொடுக்கக் கூறுங்கள் - தேவைப்பட்டால் கட்டாயம் மன நல மருத்துவரின் அறிவுரை மற்றும் கவுன்சிலிங்குக்கு பரிந்துரைக்கப்படும். அன்பினால் ஆகாதது எதுவுமில்லை. நம்மை சுற்றி இருப்பதை கிடைப்பதை நாம் முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

தடை செய்வது
இதை தடை செய்வது குறித்தும் அரசு முடிவெடுப்பது நல்லது பள்ளிகளில் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் மற்றும் நன்னடத்தை பற்றிய கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெறுவது பலனைத் தரக் கூடும். எனவே தான் இது போன்ற சிறிய க்விஸ்கள் மூலம் தெரிவிக்கலாம் என்ற எண்ணம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications