மொழி தெரியாமல், அட்ரஸ்களை எப்படி படித்து லெட்டர்களை தருவார்கள்.. ராமதாஸ் விளாசல்
அஞ்சல் துறையில் இந்தி திணிப்புக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "நாளைக்கு தேர்வு.. இப்போது திடீரென இப்படி ஒரு அறிவிப்பா" என்றும் அஞ்சல்துறை தேர்வுகளில் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழே தெரியாதவர்களை வேலைக்கு அமர்த்தினால், தமிழில் உள்ள அட்ரஸ்களை எப்படி படித்து கடிதங்களை தருவார்கள்? என்றும் டாக்டர் கேள்வி எழுப்பு உள்ளார்.
தபால் துறையின்கீழ் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த தபால் நிலையங்களில் போஸ்ட்மேன், மெயில் கார்டு, உதவியாளர் போன்ற பணியிடங்கள் காலியானால், போட்டித்தேர்வு மூலம்தான் இவ்வளவு காலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

3 ட்வீட்கள்
ஆனால், புதிய மாற்றங்கள் என்ற பெயரில், மாநில மொழிகளில் நடைபெற்று வந்த தபால்துறை முதன்மை பணிகளுக்கான முதல்தாள் எழுத்துத்தேர்வானது, இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி டாக்டர் ராமதாசும் கண்டனம் தெரிவித்து அடுத்தடுத்து 3 ட்வீட்களை போட்டு தாக்கி உள்ளார்.
|
கண்டிக்கத்தக்கது
அதில், "அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது. அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்!" என்று ஒரு பதிவு.
|
வழக்கு
"தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் அந்தத் தேர்வுகளை கடைசி நேரத்தில் ரத்து செய்தது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இந்த முடிவை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் மூலம் வழக்கு தொடரப்படும்" இது இரண்டாவது பதிவு.
|
வட இந்தியர்கள்
"இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும். தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்?" என்று கேள்வி கேட்டுள்ளது மூன்றாவது பதிவு.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications